மும்பை அணியில் சச்சின் மகனுக்கு இடமில்லை


மும்பை அணியில் தேர்வு செய்யப்பட்ட சச்சின் மகன் அர்ஜுனுக்கு விளையாடும் "லெவனில்' வாய்ப்பு தரப்படவில்லை. 

இந்திய அணியின் சாதனை வீரர் சச்சின். சமீபத்தில் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். 

இவரது வாரிசு அர்ஜுன் டெண்டுல்கரும், 13, கிரிக்கெட் அரங்கில் "ஆல்-ரவுண்டராக' வளர்ந்து வருகிறார். 

உள்ளூர் ஜிம்கானா அணி சார்பில் அசத்தி வரும் இவர், 14 வயதுக்குட்பட்டோருக்கான மும்பை அணியில் தேர்வு செய்யப்பட்டார். 

இவரை விட சிறப்பான வீரர்கள் இருக்க, சச்சின் மகன் என்பதால் தான் அணியில் வாய்ப்பு தரப்பட்டது என சர்ச்சை எழுந்தது. 

இதனிடையே, நேற்று குஜராத் அணிக்கு எதிரான மண்டல அளவிலான போட்டி துவங்கியது. 

முதலில் களமிறங்கிய குஜராத் அணிக்கு ஹெட் படேல் அதிகபட்சமாக 48 ரன்கள் எடுத்து கைகொடுக்க, 9 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்திருந்தது. 

மும்பை சார்பில் அக்னி சோப்ரா, தனுஷ் கோடியன், த்ரூவ் விவேக், ஆஜிம் ஷெய்க் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
 
இதில் மும்பைக்காக களமிறங்கிய பதினோரு வீரர்கள் கொண்ட அணியில் அர்ஜுன் சேர்க்கப்படவில்லை. 

இருப்பினும், இதுகுறித்த வருத்தம் எதுவும் இல்லாத அர்ஜுன், களத்துக்கு வெளியில் இருந்த "பெஞ்சில்' அமர்ந்து கொண்டு, வீரர்களை உற்சாகப்படுத்த சப்தமாக குரல் கொடுத்துக் கொண்டே இருந்தார். 

0 comments:

Post a Comment