இந்திய அணியில் ரோகித் சர்மா தேவையா?


இந்திய அணியில் ரோகித் சர்மாவுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிப்பது பெரும் வியப்பாக உள்ளது. 

இந்திய அணியின் "மிடில் ஆர்டர்' வீரர் ரோகித் சர்மா, 30. இதுவரை 86 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், 2010ல் அடித்த இரு சதங்கள் உட்பட 1978 ரன்கள் எடுத்துள்ளார். 

உள்ளூர் போட்டிகளில் மட்டும் வெளுத்து வாங்குவார். இப்போதைய ரஞ்சி கோப்பை தொடரில், ஐதராபாத் அணிக்கு எதிராக 112 (நவம்பர்), டிசம்பரில் பஞ்சாப்புடன் 203, சவுராஷ்டிராவுடன் 166 ரன்கள் எடுக்க, இந்திய அணியில் மீண்டும் இடம் பெற்றார்.

ஆனால், சர்வதேச போட்டிகள் என்றவுடன், ரோகித் சர்மாவுக்கு நடுக்கம் வந்துவிடும். 

கடைசியாக விளையாடிய 9 போட்டியில் ஒரு முறை (68 ரன்கள், எதிரணி-பாக்.,) மட்டும் தான் இரட்டை இலக்க ரன்களை எட்டினார். 

மற்றபடி 0, 4, 68, 5, 0, 0, 4, 4, 4 என, ஐந்து ரன்களை தாண்டுவதே பெரிய பாடாக உள்ளது.

ஒருநாள் மட்டுமன்றி, "டுவென்டி-20' போட்டியிலும் இப்படித்தான் திணறுகிறார். 

கடைசியாக விளையாடிய 5 இன்னிங்சில், 1, 25, 24, 2, 4 ரன்கள் தான் எடுத்துள்ளார். 

இவரைப் போன்றவர்களை அணியில் இருந்து நீக்கி விட்டு, "டுவென்டி-20' போட்டிகளில் அசத்திய ரகானே போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாமே. 

0 comments:

Post a Comment