மைக் ஹஸ்சி ஓய்வு அதிர்ச்சி அளிக்கிறது - பாண்டிங்


ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான மைக் ஹஸ்சி சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இலங்கைக்கு எதிராக நடந்த 3-வது டெஸ்டில் விளையாடியதே அவரது கடைசி டெஸ்ட் ஆகும்.

இந்த நிலையில் மைக் ஹஸ்சியின் ஓய்வு முடிவு தனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ஹஸ்சியின் பேட்டிங் மிகவும் சிறப்பாக இருந்தது. அவர் ஏன் ஓய்வு முடிவை எடுத்தார் என்று தெரியவில்லை. அவரது நண்பர் என்ற முறையில் எனக்கே அவரது திட்டம் தெரியாது. அவரது இந்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆசஷ் தொடருக்கு பிறகு கிளார்க் ஓய்வு பெறுவார் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால் அவர் நன்றாக ஆடி வருகிறார். ஹியூக்ஸ், உஸ்மான், குவாஜா, வாட்சன், வார்னர் ஆகியோர் வெற்றிடத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு பாண்டிங் கூறினார்.

பாண்டிங் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓய்வு பெற்றார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான பெர்த் டெஸ்டோடு அவர் ஓய்வு பெற்றார். அதற்கு அடுத்த டெஸ்ட் தொடரில் ஹஸ்சி ஓய்வு பெற்றுள்ளார். 

அனுபவம் வாய்ந்த இந்த இருவரும் இல்லாமல் ஆஸ்திரேலிய அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டில் ஆடுகிறது.

0 comments:

Post a Comment