சச்சினுக்கு வந்த ஆசை - பி.சி.சி.ஐ., மறுப்பு


ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியை, மும்பைக்கு மாற்ற வேண்டும் என்ற சச்சினின் வேண்டுகோளை ஏற்க பி.சி.சி.ஐ., மறுத்து விட்டது.

ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டிகள், ஜன.16ம் தேதி துவங்குகின்றன. பொதுவாக ரஞ்சி போட்டிகள் உள்ளூர் மற்றும் வெளியூர் அடிப்படையில் நடக்கும். 1964-65 தொடரில் மும்பை - சர்வீசஸ் அணிகள் மோதிய அரையிறுதி போட்டி, மும்பையில் நடந்தது. 

இம்முறை சுழற்சி விதிப்படி, மும்பை அணிக்கு எதிரான அரையிறுதி போட்டி, சர்வீசஸ் அணியின் சொந்த மண்ணான டில்லி, பாலம் மைதானத்தில் நடக்கவுள்ளது. இப்போட்டியை, தனது சொந்த ஊரான மும்பைக்கு மாற்ற வேண்டும் என, இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் வேண்டுகோள் விடுத்தார்.

மும்பை அணிக்காக காலிறுதியில் சதம் அடித்த சச்சின், அரையிறுதியிலும் பங்கேற்க திட்டமிட்டுள்ளதால் இப்படித் தெரிவித்தார் எனத் தெரிகிறது. 

இதற்கு பதில் அளித்த இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) அதிகாரி ஒருவர் கூறுகையில், ""ரஞ்சி கோப்பை தொடரின் விதிப்படி, இப்போட்டி டில்லியில்தான் நடக்க வேண்டும். சச்சினின் கோரிக்கையை ஏற்க முடியாது,'' என்றார். 

0 comments:

Post a Comment