அர்ஜூன் டெண்டுல்கர் தேர்வில் சர்ச்சை


14வயதுக்குட்‌பட்டோர் மும்பை கிரிக்கெட் அணியில் சச்சின் மகன் தேர்வு செய்யப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

திறைமை இருந்தும் சிலர் தேர்வு செய்யப்படாமல் சச்சின் மகனை தேர்வு செய்ததன் மர்மம் என்ன ? என தேர்வு செய்யப்படாதவர்களின் ‌பெற்றோர் புகார் கூறியுள்ளனர்.

இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின்(40). இவர் சமீபத்தில் ஒரு நாள் போட்டிக்கு குட்பை சொல்விட்டார். இவரது மகன் அர்ஜூன் டெண்டுல்கர் (14).

இவர் மகாராஷ்டிரா கிரிக‌்கெட் சங்க கிரிக்கெட் சார்பில் பள்ளிகளுக்கிடையயான போட்டிகளில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் 14 வயதுக்குட்‌ப்டோர் மும்பை அணியில் இடம் பெற்றார். இவர் தேர்வு செய்யபட்டது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஓரவஞ்சனை காட்டுவதா ?

இந்நிலையில் மும்பை டான்புஸ்‌கோ பள்ளி மாணவன் பூபன்லாவனி (14), 398 (277 பந்துகளில் ) ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். அதே போன்று 200 ரன்கள் வரை எடுத்த சில மாணவர்கள் தேர்வாகவில்லை. 

அப்படியிருக்கையில், வெறும் 124 ரன்கள் குவித்ததால் அர்ஜூன் டெண்டுல்கர் தேர்வாகியுள்ளார். சச்சின் மகன் என்பதால் இந்த சலுகையா என , தேர்வாகாத மாணவர்களின் பெற்றோர்கள் ‌ஆவேசப்பட்டனர். 

இந்த விவகாரத்தில் மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் ஓரவஞ்சனை காட்டுவதாகவும், ‌இதில் ஏதோ மர்மம் உள்ளதாகவும் கொந்தளிக்கின்றனர்.

பெற்றோர்களின் இந்த குற்றச்சாட்டினை மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் மறுத்துள்ளது. 

திறமையான மாணவர்களை சங்கம் என்றும் புறக்கணிக்கவில்லை. 

சச்சின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் திறமையின் அடிப்‌படையில் தான் தேர்வாகியுள்ளார் என்கிறது.

0 comments:

Post a Comment