சச்சின் 80வது சதம் - ரஞ்சியில் அசத்தல்


பரோடா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை காலிறுதியில் சச்சின், வாசிம் ஜாபர் சதம் அடித்து கைகொடுக்க, மும்பை அணி நல்ல ஸ்கோரை நோக்கி முன்னேறுகிறது.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் காலிறுதிப் போட்டிகள் நாட்டின் முக்கிய நகரங்களில் நேற்று துவங்கின. மும்பையில் துவங்கிய காலிறுதியில் மும்பை, பரோடா அணிகள் விளையாடுகின்றன.

மீண்டும் சச்சின்: 

சமீபத்தில், சர்வதேச ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்த இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், மும்பை அணியில் இடம் பிடித்தார். "டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் அஜித் அகார்கர், பேட்டிங் தேர்வு செய்தார்.

ஜாபர் அபாரம்:  

மும்பை அணிக்கு கவுஸ்துப் பவார் (8), ஹிகன் ஷா (9) ஏமாற்றினர். பின் வாசிம் ஜாபர், சச்சின் ஜோடி அசத்தியது. ரஞ்சி கோப்பை தொடரில் தனது 31வது சதத்தை பதிவு செய்தார். 

மறுமுனையில் அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சின், ரஞ்சி தொடரில் தனது 18வது சதத்தை பூர்த்தி செய்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 234 ரன்கள் சேர்த்த போது சச்சின் (108) அவுட்டானார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் மும்பை அணி 3 விக்கெட்டுக்கு 272 ரன்கள் எடுத்திருந்தது. ஜாபர் (137) அவுட்டாகாமல் இருந்தார். 

சாதனை நோக்கி...

இந்தியாவில், முதல் தர போட்டிகளில் அதிக சதம் அடித்துள்ள கவாஸ்கர் சாதனையை(81) சச்சின் நெருங்குகிறார். நேற்று அசத்திய இவர் தனது 80வது சதத்தை எட்டினார். சர்வதேச போட்டிகளில் சச்சின் 100 சதம் அடித்துள்ளார்.

* ரஞ்சி கோப்பை தொடரில் கவாஸ்கர் 20 சதம் அடித்துள்ளார். சச்சின், 18 சதம் அடித்துள்ளார்.

இரண்டாவது சதம்

அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்த சச்சின், இந்தி சீசனில் (2012-13) இரண்டாவது முறையாக சதம் அடித்துள்ளார். முன்னதாக கடந்த நவம்பர் மாதம் ரயில்வே அணிக்கு எதிராக விளையாடிய சச்சின் 137 ரன்கள் எடுத்தார். இப்போட்டி "டிரா' ஆனது.

0 comments:

Post a Comment