தென் ஆப்ரிக்கா கிளம்புகிறது தோனியின் படை

ஒருநாள் தொடரில் பங்கேற்கும் 16 பேர் கொண்ட இந்திய அணி, இன்று தென் ஆப்ரிக்கா கிளம்புகிறது. 
தென் ஆப்ரிக்கா செல்லவுள்ள இந்திய அணி, முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இப்போட்டிகள் டிச., 5, 8, 11 ல் ஜோகனஸ்பர்க், டர்பன் மற்றும் செஞ்சுரியனில் நடக்கவுள்ளது. 

இதற்கான 16 பேர் கொண்ட இந்திய அணி கடந்த 25ம் தேதி அறிவிக்கப்பட்டது. சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடர் உட்பட தொடர்ச்சியாக 6 ஒருநாள் கோப்பை வென்ற உற்சாகத்தில் இந்திய வீரர்கள் உள்ளனர்.

தோனி தலைமையிலான இந்த அணி, இன்று இரவு தென் ஆப்ரிக்கா கிளம்புகிறது. ஒருநாள் தொடர் முடிந்தபின், இரண்டு நாள் பயிற்சி (டிச., 14-15) போட்டியில் விளையாடுகிறது. 

இதன் பின் தான் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் துவங்குகிறது. முதல் டெஸ்ட் டிச., 18-22ல் ஜோகனஸ்பர்க்கில் நடக்கவுள்ளது. இந்த டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க 17 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுவிட்டது. 

ஒருநாள் அணியில் இல்லாத வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான், முரளி விஜய், புஜாரா, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சகா, சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா உள்ளனர். 

தென் ஆப்ரிக்க சூழ்நிலைக்கு ஏற்ப, மாற்றிக்கொள்ளும் வகையில், இந்த வீரர்களை முன்னதாக அனுப்ப இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) முயற்சித்து வருகிறது.

 மும்பை கிரிக்கெட் சங்க (எம்.சி.ஏ.,) செயலர் நிடின் தலால் கூறுகையில்,"" மும்பை அணி கேப்டன் ஜாகிர் கான், இன்னும் ஓரிரு நாட்களில் தென் ஆப்ரிக்கா கிளம்புவார் எனத் தெரிகிறது. இதனால், அடுத்து வரும் ரஞ்சி கோப்பை போட்டிகளில் பங்கேற்க மாட்டார்,'' என்றார்.

பி.சி.சி.ஐ., செயலர் சஞ்சய் படேல் கூறுகையில்,"" ஜாகிர் கானை மட்டுமல்ல, ஒருநாள் தொடரில் இடம் பெறாத மற்ற டெஸ்ட் வீரர்களையும், விரைவில் தென் ஆப்ரிக்கா அனுப்ப முயற்சித்து வருகிறோம்,'' என்றார்.

0 comments:

Post a Comment