
தென் ஆப்ரிக்க தொடருக்கு தயாராகும் விதத்தில், இந்திய "ஏ' அணி கடந்த ஆக., மாதம் அங்கு சென்றது.
இதன் கேப்டனாக புஜாரா இருந்தார். அதிகாரப்பூர்வமற்ற இரு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற இந்திய அணி தொடரை "டிரா' (1-1) செய்தது.
இதில் பேட்டிங்கில் அசத்திய புஜாரா, தலா ஒரு சதம், அரைசதம் (137, 54 ரன்கள்) அடித்தார். இப்போது, முதல் டெஸ்டில் 153 ரன்கள் எடுத்தார். இதுகுறித்து இந்திய "ஏ' அணி பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புத் கூறியது:
இந்திய "ஏ' அணி தொடரின் போது, எதிர்வரும் இந்திய அணியின் பயணத்தை மனதில் கொண்டு, சூழ்நிலைகளை நன்கு பழக்கப்படுத்திக் கொண்டார் புஜாரா.
அது தான் இப்போது இவருக்கு கைகொடுத்துள்ளது. மிகவும் மன உறுதி மிக்க அவர், தனது விக்கெட்டின் மதிப்பு குறித்து நன்கு தெரிந்து வைத்துள்ளார்.
ஜோகனஸ்பர்க் டெஸ்டில் இவர் விளையாடியதைப் பார்த்த போது, முதல் இன்னிங்சிலேயே சதம் அடித்திருக்க வேண்டும். துரதிருஷ்டவசமாக 25 ரன்னில் ரன் அவுட்டாகி விட்டார்.
இவ்வாறு லால்சந்த் ராஜ்புத் கூறினார்.
0 comments:
Post a Comment