கபில்தேவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

பி.சி.சி.ஐ., சார்பில் வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு, கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் தேர்வு செய்யப்பட்டார்.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், ஆண்டுதோறும், சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்படுவார். 

நடப்பு ஆண்டுக்கான இந்த விருதுக்கு, 1983ல் இந்தியாவுக்கு முதன்முறையாக உலக கோப்பை (50 ஓவர்) வென்று தந்த, முன்னாள் கேப்டன் கபில்தேவ் தேர்வு செய்யப்பட்டார். 

இவரை, பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன், செயலாளர் சஞ்சய் படேல் ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழு கமிட்டி, சென்னையில் நேற்று தேர்வு செய்தது. 

இவருக்கு, இவ்விருதுடன் ரூ. 25 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. பி.சி.சி.ஐ.,யின் விருது வழங்கும் நிகழ்ச்சியில், கபில்தேவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும்.

கடந்த 1983ல் முதன்முறையாக இந்தியாவுக்கு உலக கோப்பை பெற்றுத் தந்த கபில்தேவ், இதுவரை 131 டெஸ்ட் (5248 ரன்கள், 434 விக்கெட்), 225 ஒருநாள் (3783 ரன்கள், 253 விக்கெட்) போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த ஆண்டு இவ்விருது, முன்னாள் கேப்டன் கவாஸ்கருக்கு வழங்கப்பட்டது.

இதுகுறித்து பி.சி.சி.ஐ., செயலாளர் சஞ்சய் படேல் கூறுகையில், ""இந்த ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு கபில் தேவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

விருதுடன், ரூ. 25 லட்சத்துக்கான காசோலை வழங்கி கவுரவிக்கப்படுவார். விருது வழங்கும் நிகழ்ச்சி குறித்து விரைவில் அறிவிக்கப்படும்,'' என்றார்.

0 comments:

Post a Comment