வீரர்கள் தேர்வு - கோபத்தில் காம்பிர்

டில்லி அணியில் தனக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்யாத கோபத்தில் காம்பிர் உள்ளதாக தெரிகிறது.
இந்திய அணி வீரர் காம்பிர். "பார்ம்' இல்லாமல் தவித்ததால், ரஞ்சி தொடரில் விளையாடி வருகிறார். டில்லி அணியின் கேப்டனாக உள்ளார். 

இந்நிலையில், நாளை துவங்கும் ஐந்தாவது லீக் போட்டியில் ஒடிசாவை சந்திக்கிறது. இதற்கான அணி தேர்வுக்கூட்டத்தில் காம்பிர் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. 

இது குறித்து டில்லி கிரிக்கெட் அசோசியேஷன் நிர்வாகி ஒருவர் கூறுகையில்,"" கேப்டன் காம்பிர் கூடுதல் சுழற்பந்துவீச்சாளர்களை கேட்டார். 

"பவுலர்' மனோஜ் சவுகான் இடம்பெற வேண்டும் என விரும்பினார். தேர்வாளர்களோ, மோகித் சர்மாவுக்கு வாய்ப்பு தந்ததாக தெரிகிறது. இதனால், காம்பிர் கோபத்தில் உள்ளார்,'' என்றார்.

டில்லி கிரிக்கெட் சங்க தேர்வுக்குழு தலைவர் சேட்டன் சவுகான் கூறுகையில்,"" 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்துள்ளோம். 

வருண் மற்றும் மனான் சர்மா என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். காம்பிருடன் கருத்து வேறுபாடு எதுவும் கிடையாது,'' என்றார். 

0 comments:

Post a Comment