ஹாக்கி - இந்தியா அவுட்

ஜூனியர் உலக கோப்பை தொடரின் காலிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது இந்திய அணி. நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் தென் கொரியாவுடன் "டிரா' செய்தது.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில், 10வது ஜூனியர் ஆண்கள் உலக கோப்பை ஹாக்கி தொடர், டில்லியில் நடக்கிறது. "சி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, முதல் லீக் போட்டியில் நெதர்லாந்திடம் தோற்றது. அடுத்து கனடாவை வீழ்த்திய இந்திய அணி, மூன்றாவது மற்றும் கடைசி லீக் போட்டியில், தென் கொரியாவை எதிர்கொண்டது. 

இதில் வென்றால் மட்டுமே காலிறுதிக்கு செல்ல முடியும் என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணிக்கு, 3 வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை, ராமன்தீப் வீணடித்தார்.

தொடர்ந்து இந்திய வீரர்கள் செய்த தவறுகளால், 16வது நிமிடம் தென் கொரிய அணிக்கு "பெனால்டி கார்னர்' வாய்ப்பு கிடைத்தது. இதில் லீ ஒரு கோல் அடிக்க, 0-1 என இந்திய அணி பின்தங்கியது. 

பின், 33வது நிமிடம் கிடைத்த "பெனால்டி கார்னரில்', குர்ஜிந்தர் சிங் கோலாக மாற்ற இந்திய அணிக்கு சற்று நிம்மதி கிடைத்தது. அடுத்த சில நிமிடத்தில் (35வது), "பெனால்டி கார்னரில்', குர்ஜிந்தர் சிங் இரண்டாவது கோல் அடிக்க, முதல் பாதியில் இந்திய அணி 2-1 என, முன்னிலை பெற்றது.


திடீர் திருப்பம்:

இரண்டாவது பாதியில் மன்தீப் ஒரு "பீல்டு' கோல் அடிக்க, 3-1 என, வ<லுவான முன்னிலை பெற்றது. இருப்பினும், கடைசி நேரத்தில் எதிரணியை கோல் அடிக்க விட்டு ஏமாறுவதை வழக்கமாக கொண்ட இந்திய வீரர்கள், நேற்றும் சொதப்பினர். 

இதைப் பயன்படுத்திய தென் கொரிய வீரர் சீயுங்ஜு, 58, 60 வது நிமிடங்களில் , இரண்டு கோல்கள் அடிக்க, இந்திய அணியின் காலிறுதி கனது தகர்ந்தது. முடிவில், போட்டி 3-3 என்ற கணக்கில் "டிரா' ஆனது. 


இந்தியா "அவுட்';

"சி' பிரிவில் இந்தியா, தென் கொரிய அணிகள் தலா 4 புள்ளிகள் பெற்ற போதும், இத்தொடரில் அதிக கோல்கள் அடித்ததன் அடிப்படையில், இரண்டாவது இடம் பெற்ற தென் கொரிய அணி காலிறுதிக்கு முன்னேறியது. 9 முதல் 12வது இடங்களுக்கான போட்டியில் இந்திய அணி, நாளை அர்ஜென்டினாவை சந்திக்கிறது.

0 comments:

Post a Comment