பிரிமியர் கிரிக்கெட் - புதிய விதிமுறைகள்



ஏழாவது பிரிமியர் தொடருக்கான ஏலம், அடுத்த ஆண்டு பிப்., 12ம் தேதி நடக்கவுள்ளது. 

இந்தியாவில் கடந்த 2008 முதல் பிரிமியர் "டுவென்டி-20' தொடர் வெற்றிகரமாக நடந்து வருகிறது. புனே அணி சமீபத்தில் நீக்கப்பட்டதால், இம்முறை சென்னை, மும்பை, கோல்கட்டா, டில்லி, பஞ்சாப், பெங்களூரு, ராஜஸ்தான் என, மொத்தம் 8 அணிகள் பங்கேற்கவுள்ளன. 

முதல் தொடரில் ஒரு அணிக்கு 50க்கும் மேற்பட்ட வீரர்கள் இருந்தனர். போகப் போக இது பாதியானது. தற்போது மொத்த வீரர்கள் எண்ணிக்கை 33 ல் இருந்து 27 ஆக குறைக்கப்படுகிறது. 

இத்தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம், வரும் 2014, பிப்., 12ல் நடக்கும். தேவைப்பட்டால், 13ம் தேதி ஏலம் தொடரும். இடம் பின்னர் முடிவு செய்யப்படும். ஏழாவது பிரிமியர் தொடர் ஏலம் குறித்து முக்கிய விவரங்கள்:


வீரர்கள் ஒப்பந்தம்:

* வீரர்கள் ஒரு ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்படுவர். தேவைப்பட்டால், அணி உரிமையாளர் இதை மேலும் ஓரிரு ஆண்டுக்கு நீட்டிக்கலாம்

* சம்பளம் ரூபாய் மதிப்பில் தரப்படும்.

* ரூபாய் மதிப்பு ஏற்ற, இறக்கத்தில் வீரர்களுக்கு பாதகமில்லாமல் சம்பளம் தரப்படும். 


அணி விவரம்:

* ஒவ்வொரு அணியும் குறைந்தது 16, அதிகபட்சம் 27 வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். 9 வெளிநாட்டு வீரர்களுக்கு மேல் இடம் பெறக் கூடாது. 

* விளையாடும் லெவனில், 4 வெளிநாட்டு வீரர்கள் தான் இருக்க வேண்டும். 

* 19வயதுக்குட்பட்ட வீரர்கள் முதல் தரம் அல்லது "ஏ' பிரிவு போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். 

* வீரர்களுக்கு மொத்த செலவு ரூ. 60 கோடி. இது 2015, 16ல் 5 சதவீதம் அதிகரிக்கும். 

* வீரர்கள் ஏலத்துக்கு குறைந்தது ரூ. 36 கோடி செலவிட வேண்டும்.


இம்முறை ஐந்து:

* ஒவ்வொரு அணியும் ஐந்து வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம். 

* இதை 2014, ஜன., 10க்குள் முடிவு செய்யவேண்டும். 

* அணியின் "டாப்' வீரருக்கு, ரூ. 12.5 கோடி தரலாம். இரண்டாவது வீரருக்கு ரூ. 9.5 கோடி, அடுத்து ரூ. 7.5 கோடி, ரூ. 5.5 கோடி மற்றும் ஐந்தாவது வீரருக்கு ரூ. 4 கோடி என்ற விகிதத்தில் பிரித்து தரப்படும். 

* முதல் 5 வீரர்களுக்கு ரூ. 39 கோடி போக, மீதமுள்ள 21 கோடியில், 22 வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். 

0 comments:

Post a Comment