ஓய்வு பெறுவாரா ஹர்பஜன்?



இந்திய அணிக்காக இன்னும் 3 அல்லது 4 ஆண்டுகள் விளையாடுவேன். தற்போது ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை,'' என, ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், 33. இதுவரை 101 டெஸ்ட் (413 விக்.,), 229 ஒரு நாள் (259 விக்.,), 25 "டுவென்டி-20' (22 விக்.,) போட்டியில் விளையாடி உள்ளார். 

கடைசியாக கடந்த மார்ச் மாதம் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் பங்கேற்றார். தற்போது ரஞ்சி கோப்பையில் கலந்து கொள்கிறார். இந்திய அணியில் விளையாட முடியாததால், ஓய்வு முடிவில் உள்ளதாக சொல்லப்பட்டது. 

இது குறித்து இவர் கூறியது: இந்திய அணியில் இன்னும் 3 அல்லது 4 ஆண்டுகள் பங்கேற்று, அதிக விக்கெட் வீழ்த்த வேண்டும். 

இது தான் என் எண்ணம். எனவே, ஓய்வு என்ற முடிவுக்கு இடமில்லை. ரஞ்சி கோப்பை தொடரில் பஞ்சாப் அணிக்காக முதல் இரு போட்டியில் 17 விக்கெட் வீழ்த்தினேன். 

இதன் பின், தோள்பட்டை காயம் காரணமாக வெளியேறினேன். இப்படி அவ்வப்போது, காயம் தொல்லை தருகிறது. இருப்பினும், இதிலிருந்து விரைவில் மீண்டு, இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிப்பேன் என நம்புகிறேன். 

இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறினார்.

0 comments:

Post a Comment