
பிபா உலக கோப்பை (17 வயதுக்குட்பட்டோர்) தொடரை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்ததன் மூலம், புதிய சகாப்தம் உருவாகும்,'' என, இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் செத்ரி தெரிவித்தார்.
வரும் 2017ல் உலக கோப்பை கால்பந்து தொடரை (17 வயதுக்குட்பட்டோர்) நடத்தும் அரிய வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இதை தங்களது மண்ணில் அரங்கேற்ற, தென் ஆப்ரிக்கா, அயர்லாந்து, உஸ்பெகிஸ்தான் நாடுகளும் போட்டியிட்டன.
முடிவில், இந்தியாவுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. "பிபா'வின் மிகப் பெரும் ஒரு தொடரை நடத்த இருப்பது இதுவே முதல் முறை. இது பல இளம் வீரர்கள் மத்தியில் புத்துணர்ச்சியை பாய்ச்சியுள்ளது.
இது குறித்து இந்திய அணிக்கு அதிக கோல் (43 ) அடித்த செத்ரி கூறியது: இந்தியாவுக்கு உலக கோப்பை கால்பந்து தொடர் நடத்தும் பெருமை கிடைத்தது மிகப்பெரியது.
பல நாடுகள் போட்டியிட்டதன் முடிவில், நமக்கு வாய்ப்பு கிடைத்தது எப்படி எனத் தெரியவில்லை. இதன் மூலம், புதிய சகாப்தம் உருவாகியுள்ளது. இது மகிழ்ச்சியை தருகிறது. இதற்காக திறமையான வீரர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
நமது அணி முன்னாள் கேப்டன் பாய்ச்சங் (42 கோல்) பூட்டியாவின் சாதனையை முறியடித்துள்ளேன்.
இதை நான் மனதில் வைத்துக் கொள்வது கிடையாது. அணியின் வெற்றிக்காக மட்டும்தான் செயல்படுவேன்.
நான் பூட்டியாவின் தீவிர ரசிகன். அடுத்த ஆண்டு பிரேசிலில் நடக்கவுள்ள "பிபா' உலக கோப்பை தொடரில் ஸ்பெயின், அர்ஜென்டினா, ஜெர்மனி அணிகள் பலமானவை. இவ்வாறு செத்ரி கூறினார்.
0 comments:
Post a Comment