டோனிக்கு ஐ.சி.சி. விருது - ரசிகர்களால் தேர்வு

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனிக்கு ஐ.சி.சி. விருது கிடைத்துள்ளது. ரசிகர்களால் தேர்வு செய்த விருதை அவர் பெறுகிறார். 

இந்த விருதை பெறும் இரண்டாவது இந்தியர் டோனி ஆவார். இதற்கு முன்பு டெண்டுல்கர் 2011–ம் ஆண்டு இந்த விருதை பெற்று இருந்தார். 

2012–ம் ஆண்டு இலங்கை வீரர் சங்ககராவுக்கு இந்த விருது கிடைத்தது.

கிளார்க் (ஆஸ்திரேலியா), கூக் (இங்கிலாந்து), டிவில்லியர்ஸ் (தென்ஆப்பிரிக்கா), வீராட்கோலி, டோனி ஆகிய 5 பேர் இந்த விருதுக்கான பட்டியலில் இடம் பெற்று இருந்தனர். இதில் டோனியே ரசிகர்களால் சிறந்த வீரராக தேர்வு பெற்றுள்ளார்.

இதேபோல ஒருநாள் போட்டிக்கான ஐ.சி.சி. அணியில் டோனி தொடர்ந்து 6–வது முறையாக இடம் பெற்றுள்ளார். கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக அவர் ஐ.சி.சி. அணியில் தேர்வாகி உள்ளார்.

0 comments:

Post a Comment