கேப்டன் ஆகிறார் ரோகித் சர்மா


ராஜஸ்தான் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் விளையாடும் மும்பை அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில், ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடருக்கான முதல் சுற்று லீக் போட்டிகள் நாட்டின் முக்கிய நகரங்களில் நடந்தது. இதில் மும்பையில் நடந்த "ஏ பிரிவு லீக் போட்டியில் மும்பை, ரயில்வேஸ் அணிகள் மோதின. 

இப்போட்டி "டிராவில் முடிந்த போதிலும், முதல் இன்னிங்சில் பெற்ற முன்னிலை அடிப்படையில் மும்பை அணிக்கு 3 புள்ளிகள் கிடைத்தது.

இரண்டாவது சுற்று லீக் போட்டிகள் நாளை துவங்குகிறது. ஜெய்ப்பூரில் நடக்கவுள்ள லீக் போட்டியில் "நடப்பு சாம்பியன் ராஜஸ்தான், மும்பை அணிகள் மோதுகின்றன. 

இப்போட்டிக்கான மும்பை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. முதல் நான்கு லீக் போட்டிகளுக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட அஜித் அகார்கர், கெண்டைக்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக நீக்கப்பட்டார். இதனால் கேப்டன் பொறுப்பு ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

முதல் லீக் போட்டியின் போது இடுப்பு பகுதியில் காயமடைந்த வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான், அஜின்கியா ரகானே மற்றும் "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் மூவரும் இங்கிலாந்துக்கு எதிராக ஆமதாபாத்தில் நடக்கவுள்ள முதல் டெஸ்டில் விளையாட இருப்பதால், இப்போட்டியில் இருந்து விலகினர்.

0 comments:

Post a Comment