இரட்டை சதம் அடித்த புஜாராவுக்கு கபில்தேவ் பாராட்டு


இங்கிலாந்துக்கு எதிராக அகமதாபாத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் புஜாரா இரட்டை சதம் அடித்தார். 

அவர் 513 நிமிடங்கள் களத்தில் நின்று 389 பந்துகளில் 21 பவுண்டரியுடன் 206 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். தனது 6-வது டெஸ்டில் புஜாரா இரட்டை சதம் அடித்து முத்திரை பதித்தார். 

டெஸ்டில் அவரது 2-வது சதம் ஆகும். கடந்த ஆகஸ்ட் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக புஜாரா தனது முதல் சதத்தை (159 ரன்) அடித்து இருந்தார். 

இரட்டை சதம் அடித்த புஜாராவை இந்திய அணி முன்னாள் கேப்டன் கபில் தேவ் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- 

இரட்டை சதம் அடித்த புஜாராவின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. அவரை நான் பாராட்டுகிறேன். அதற்காக புஜாராவை டிராவிட்டுடன் ஒப்பிட வேண்டாம். டிராவிட் 15 ஆண்டுகள் விளையாடி உள்ளார். 

புஜாரா இப்போது தான் விளையாட ஆரம்பித்து உள்ளார். நிலைத்து நின்று ஆடக்கூடிய திறமைசாலி தான். இப்போதே அவரை டிராவிட்டுடன் ஒப்பிடுவது சரியல்ல. 

புஜாரா அணியில் தனக்குரிய இடத்தை பிடிக்க வேண்டும். டிராவிட் இடத்துக்கு பொருத்தமானவர் என்று கூறி அவருக்கு நெருக்கடி ஏற்படுத்திவிட வேண்டாம். 

வீராட்கோலி வருங்காலங்களில் சில செஞ்சூரிகள் அடித்தால் அதற்காக அவரை தெண்டுல்கருடன்  ஒப்பிட்டுவிட முடியுமா? அது மாதிரி தான் டிராவிட்டுடன் புஜாராவை எளிதில் ஒப்பிட்டுவிட இயலாது. 

இவ்வாறு கபில்தேவ் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment