யுவராஜ், ஹர்பஜனுக்கு மீண்டும் வாய்ப்பு


இங்கிலாந்து அணிக்கு எதிரான, முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. எதிர்பார்த்தது போல ரெய்னா நீக்கப்பட்டார். ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் மீண்டும் இடம் பெற்றனர்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் 2 டெஸ்டில் பங்கேற்கும், 15 பேர் கொண்ட இந்திய அணியை, சந்தீப் பாட்டீல் தலைமையிலான புதிய தேர்வுக்குழு நேற்று அறிவித்தது. இதில் கேப்டன் தோனியும் பங்கேற்றார். 

இந்த டெஸ்ட் அணியில் தோனி தவிர, எட்டு "ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்கள், தலா மூன்று வேகப்பந்து மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். ரஞ்சி கோப்பை போட்டிகளில் சதம் அடித்து அசத்திய சச்சின், சேவக் மற்றும் காம்பிர், விராத் கோஹ்லி ஆகியோர் வழக்கம் போல இடம் பெற்றனர். 

மூன்றாவது துவக்க வீரர் இடத்துக்கு சமீபத்திய உள்ளூர் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த தமிழகத்தின் முரளி விஜய் தேர்வு பெற்றார். 

ஒரு ஆண்டுக்கு பின்...

"கேன்சர் பாதிப்பில் இருந்து மீண்ட யுவராஜ் சிங், துலீப் டிராபி போட்டியில் இரட்டை சதம் அடித்து இருந்தார். தவிர, இங்கிலாந்து லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் அரைசதம் மற்றும் பவுலிங்கில் 5 விக்கெட் கைப்பற்றி "ஆல் ரவுண்டராக ஜொலித்தார். 

இது தேர்வாளர்களை கவர, ரெய்னா இடத்தை யுவராஜ் சிங் தட்டிச் சென்றார். "மிடில் ஆர்டர் வீரர் என்ற பெயரில் ரகானேவுக்கு இடம் கிடைத்துள்ளது.

ஜாகிர் தேர்வு:

இந்தியாவின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான், ரஞ்சி கோப்பை போட்டியின் போது, இடுப்பு தசைப்பிடிப்பால் அவுதிப்பட்டார். இருப்பினும், போட்டி துவங்க இன்னும் 9 நாள் இருப்பதால் ஜாகிர் கான் அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். இவருடன் உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா இருவருக்கும் இடம் கிடைத்தது. 

மீண்டும் ஹர்பஜன்:

சுழற்பந்து வீச்சாளர்கள் இடத்தில் அஷ்வின், பிரக்யான் ஓஜா இருவரும் மீண்டும் தேர்வாகினர். மூன்றாவது இடத்துக்கு பியுஸ் சாவ்லா, ஹர்பஜன் இடையே கடும் போட்டி இருந்தது. சாவ்லா காயம் சரியாகாததால், வேறு வழியின்றி ஹர்பஜன் சிங்கிற்கு இடம் கிடைத்தது. 

இவர், இங்கிலாந்துக்கு எதிரான நாட்டிங்காம் டெஸ்டில், கடைசியாக (2011, ஆக.,) பங்கேற்றார். இதன் பின் மோசமான "பார்ம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார். அடுத்து இந்தியாவில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடர், ஆஸ்திரேலியா சென்ற அணியிலும் இடம் பெறவில்லை. சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் புறக்கணிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று திடீரென வாய்ப்பு கிடைத்துள்ளது. 

இந்திய அணி விவரம்:

தோனி (கேப்டன்), சேவக், காம்பிர், விராத் கோஹ்லி, சச்சின், யுவராஜ் சிங், புஜாரா, அஷ்வின், உமேஷ் யாதவ், பிரக்யான் ஓஜா, ரகானே, ஹர்பஜன் சிங், இஷாந்த் சர்மா, முரளி விஜய், ஜாகிர் கான்.
பயிற்சி ரிசல்ட் செய்திக்கு பாக்ஸ்

சோகத்தில் ரெய்னா

டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்ட ரெய்னா நேற்று பெரும் சோகத்துடன் இருந்தார். டில்லி எதிரான ரஞ்சி கோப்பை போட்டியின் போது, இவர் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்ட செய்தி கிடைத்தது. எப்போதும் "டிரசிங் அறையில் மகிழ்ச்சியுடன் இருக்கும் ரெய்னா, உடனடியாக "அப்செட் ஆகிவிட்டார். 

இதனால், மதியம் <உணவு சாப்பிடாமல், சோகத்துடன் தனி அறைக்கு சென்றுவிட்டார். எப்÷ பின் பேட்டிங் செய்ய களமிறங்கிய இவர் 37 ரன்கள் எடுத்து, உ.பி., அணியின் வெற்றிக்கு உதவினார். இதற்கான பரிசை பெறக் கூட ரெய்னா வரவில்லை.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறுகையில்,"" ஒவ்வொரு வீரருக்கும் டெஸ்ட் போட்டியில் விளையாட தகுதி உள்ளது. இதுபோலத் தான் ரெய்னாவும். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்த இவரை, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கட்டாயம் சேர்த்திருக்க வேண்டும். தன்னை நிரூபிக்க இன்னும் வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும். தேர்வாளர்களின் முடிவு அதிருப்தி தருகிறது, என்றார்.

விமர்சனத்துக்கு ஹர்பஜன் பதிலடி

அணியில் இடம் பெற்றது குறித்து ஹர்பஜன் சிங் கூறியது:

போட்டியில் விக்கெட் எடுக்கவில்லை என்பதற்காக சிறந்த பவுலர் இல்லை என்று ஆகிவிடாது. அவரது திறமையான பவுலிங்கும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ஆனால், கிரிக்கெட் விளையாடாதவர்கள் எல்லாம் என்னைப் பற்றி முட்டாள் தனமாக எழுதினர். 

ஒரு சுழற்பந்து வீச்சாளரின் பங்கு என்பது, ஆடுகளத்துக்கு ஏற்ப மாறும். வார்னே, முரளிதரன் போன்ற ஜாம்பவான்கள், பல போட்டிகளில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்துள்ளதை பார்த்துள்ளேன். அதுபோல் தான் நானும், வித்தைக்காரன் ("மேஜிக் மேன்) அல்ல. 

"டுவென்டி-20 உலக கோப்பை அணியில் இடம் கிடைத்த நிலையில், இங்கிலாந்து தொடரில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். இது நடந்தது எனக்கு மிகப்பெரிய செய்தி. 

இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறினார்.

0 comments:

Post a Comment