சச்சினை மட்டும் சார்ந்திருக்கலாமா?


இங்கிலாந்து தொடரில் இந்திய அணி, சச்சினை மட்டும் சார்ந்து இருக்கக் கூடாது, என, கபில் தேவ் தெரிவித்தார். இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் இன்று ஆமதாபாத்தில் துவங்குகிறது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் கூறியது:

இங்கிலாந்து தொடரில் அனைவரது கவனமும் சச்சின் மீது தான் இருக்கும். அவர் இந்திய அணியின் முக்கிய வீரர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனாலும் அவரை மட்டும் சார்ந்து இருக்கக் கூடாது. இளம் வீரர்கள் பொறுப்புகளை தங்கள் தோளில் சுமக்கும் நேரம் வந்துவிட்டது. 

எதிராகி விடும்:

சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தில் விளையாடும் போது, "டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். ஏனெனில், இதுபோன்ற நிலையில் எந்த அணியும் முதலில் "பேட்டிங் செய்யவே விரும்பும். இதனால், அணியின் பலத்திற்கு ஏற்ப ஆடுகளங்கள் அமைக்கப்பட வேண்டும். இல்லையெனில், அதுவே நமக்கு எதிராக திரும்பி விடும். 

அச்சமாக உள்ளது:

அணியின் துவக்க வீரர்கள் சேவக், காம்பிருக்கு அதிக பொறுப்புள்ளது. ஆனால், கடந்த 15 முதல் 20 டெஸ்டில் இவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வில்லை. இங்கிலாந்துக்கு எதிராக இவர்கள் சரியாக விளையாடவில்லை எனில், என்ன நடக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது. 

ஜாகிர் கான் "பார்மில் இல்லை. ஹர்பஜனும் சமீபத்தில் சொதப்பியுள்ளார். இந்நிலையில், ஒன்று அல்லது இரண்டு டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றினாலே, பெரிய சாதனை தான். 

இங்கிலாந்து அணியில் வலுவான பேட்ஸ்மேன்கள், "ஆல்-ரவுண்டர்கள் உள்ளனர். அந்த அணியின் பவுலிங்கும் நன்றாக உள்ளது. "டெயிலெண்டர்கள் வரை பேட்டிங் வரிசை நீளுகிறது. 

இவர்களிடம் உள்ள ஒரே பலவீனம், ஒருங்கிணைந்து விளையாடாதது தான். 
இவ்வாறு கபில் தேவ் கூறினார்.

0 comments:

Post a Comment