பிப்ரவரியில் இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்


அடுத்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.

இப் போட்டிகள் கான்பூர், சென்னை, தில்லி, மொஹாலி ஆகிய நகரங்களில் நடைபெறுகின்றன என்று பிசிசிஐ தலைமைச் செயல் அதிகாரி ரத்னாகர் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

இதேபோல் பயிற்சிப் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி விளையாடுகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் ஒருநாள் போட்டிகள் மற்றும் இருபது ஓவர் போட்டிகள் இடம்பெறவில்லை.

எனினும் ஆஸ்திரேலிய அணியின் இந்திய சுற்றுப்பயணம் குறித்த முழு விவரம், ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான தொடருக்குப் பிறகே தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான தொடர் பிப்ரவரி 13 ஆம் தேதி நிறைவடைகிறது.

0 comments:

Post a Comment