சர்வதேச கிரிக்கெட்டில் 23 ஆண்டுகளை நிறைவு செய்த தெண்டுல்கர்


உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான சச்சின் தெண்டுல்கர் 1989-ம் ஆண்டு நவம்பர் 15-ந்தேதி பாகிஸ்தானுக்கு எதிரான கராச்சி டெஸ்டில் அறிமுகம் ஆனார். 16 வயது மற்றும் 223 நாட்களில் அவர் சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆனார்.

தனது முதல் ஆட்டத்தில் அவர் 15 ரன்கள் எடுத்தார். 39 வயதான அவர் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். 

5 அடி 5 அங்குலம் உயரம் கொண்ட தெண்டுல்கர் 190 டெஸ்ட்டில் 15,533 ரன்னும், 463 ஒருநாள் போட்டியில் 18,426 ரன்னும் எடுத்துள்ளார். 

சர்வதேச போட்டிகளில் 100 சதம் (டெஸ்ட் 51 + ஒருநாள் போட்டி 49) அடித்துள்ளார். ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் ஆவார். 

23 ஆண்டு காலம் சிறப்பான ஆட்டம் மூலம் அவர் கோடிகணக்கான ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார். 

கிரிக்கெட்டின் சகாப்தமான அவர் இளம் வீரர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார். 

கிரிக்கெட்டில் அவரது அசாதாரண சேவையை பாராட்டும் விதமாக இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லி மேல்-சபை நியமன எம்.பி.யாக நியமிக்கப்பட்டார்.

0 comments:

Post a Comment