இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஒலிம்பிக் சங்கம் கண்டனம்


இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்டில், மைதானத்தில் இருந்து புகைப்படங்களை எடுக்க கெட்டி இமேஜஸ், ஆக்சன் இமேஜஸ் மற்றும் சில இந்திய ஏஜென்சிகளுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி மறுத்து விட்டது. 

இதை கண்டித்து ஏ.எப்.பி., ராய்ட்டர்ஸ், ஏ.பி., போன்ற சர்வதேச செய்தி மற்றும் புகைப்பட நிறுவனங்கள் இந்த போட்டியை புறக்கணித்துள்ளன. கிரிக்கெட் இணையதளமான ஈ.எஸ்.பி.என்-கிரிக் இன்போவும் இந்த டெஸ்ட் தொடர்பான நேரடி படங்களை வெளியிடவில்லை. 

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஓ.சி.) கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐ.ஏ.சியின் பத்திரிக்கை பிரிவு சேர்மன் கெவான் கோஸ்பர் கூறுகையில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முடிவு ஐ.ஏ.சி.க்கு கடும் அதிருப்தி அளிக்கிறது. 

விளையாட்டு தொடர்பான நிகழ்ச்சிகளை வெளியிடும் ஊடக சுதந்திரத்தின் மீதான நேரடி தாக்குதலாக இதனை கருதுகிறோம். உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு ரசிகர்களையும் இது அவமதிப்பதாகும். இந்த பிரச்சினையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலையிடும் என்று நம்புகிறோம் என்றார்.

0 comments:

Post a Comment