சச்சினுக்கு ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா விருது


இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு ஆஸ்திரேலியா அரசு ,ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா விருது வழங்கி கவுரவித்தது. ஆஸ்திரேலியா அரசின் விருது பெறும் இரண்டாவது நபர் சச்சின் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் சதத்தில் சதம் உட்பட பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜ்யசபா எம்.பி.,யாக பதவி ஏற்றார். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் டில்லி வந்த ஆஸ்திரேலிய பிரதமர் ஜீலியா கில்லார்ட், ஆஸ்திரேலியர்கள் மற்றும் சிறந்த சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் ஆஸ்திரேலிய நாட்டின் உயரிய விருதான ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா விருது வழங்கப்படும் என அறிவித்தார். ஆஸ்திரேலியா கலை மற்றும் பிராந்திய அமைச்சர் இந்தியா வரும்போது வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். 

இதற்கு அந்நாட்டு எம்.பி., ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறுகையில், இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை நேசிக்கிறேன் அதற்காக அவருக்கு ஆஸி.,யின் கவுரவமிக்க விருதினை கொடுப்பது சரியல்ல. ஆஸ்திரேலியாவில் பிறந்தவர்களுக்கு மட்டும் வழங்க வேண்டும் என கூறினார். 

சச்சினுக்கு விருது வழங்கப்படுவதை ஆதரித்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட், இதனால் இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான நல்லுறவு வலுப்படும் என கூறினார். 

ஆனால் மற்றொரு வீரரான மாத்யூ ஹைடன் விருதுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறுகையில், சச்சின் ஆஸ்திரேலியாவில் வசித்தால், அவருக்கு பிரதமர் பதவி கூட அளியுங்கள் என கூறினார். 

இந்நிலையில், சச்சினுக்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருதான, ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை சச்சின் பெற்றுக்கொண்டார். இந்தியாவின் சோலி சொராப்ஜிக்கு பின்னர் இந்த விருதை பெறும் இரண்டாவது இந்தியர் சச்சின் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment