புது சர்ச்சை கிளப்பினார் தோனி

இந்திய கேப்டன் தோனியின்  வேண்டுகோளுக்கு ஒத்துழைக்காத ஈடன் கார்டன் ஆடுகள பராமரிப்பாளர் மாற்றப்பட்டார். இதனால், புதிய சர்ச்சை வெடித்துள்ளது. இங்கிலாந்து தொடரில் ஆடுகளம் குறித்து தொடர்ந்து பிரச்னை ஏற்படுகிறது. ஆமதாபாத் டெஸ்டில் "சுழலுக்கு' ஆடுகளம் ஒத்துழைக்க, இந்திய அணி வெற்றி பெற்றது.  ஆனாலும், ஆடுகளம் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை என தோனி புகார் கூறினார். மும்பை போட்டிக்கு, பந்து முதல் நாளில் இருந்தே சுழலுமாறு ஆடுகளம் அமைக்க...

மவுனம் கலைப்பாரா சச்சின்

ஓய்வு உள்ளிட்ட எதிர்கால திட்டம் குறித்து சச்சின் விரைவில் முடிவு எடுக்க வேண்டும்,'' என, முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்தார். இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், 39. சதத்தில் சதம் உள்ளிட்ட பல்வேறு சாதனைகள் படைத்த இவர், சமீபகாலமாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இவரது "பார்ம்' குறித்து முன்னாள் வீரர்கள் சிலர் விமர்ச்சனம் செய்து வருகின்றனர். முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ் கூறியது: சச்சினின் சமீபத்திய "பார்ம்' கவலை...

டிராவிட்டுடன் என்னை ஒப்பீடுவது தவறு - புஜாரா

இந்திய டெஸ்ட் அணியில் விளையாடும் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் புஜாரா. இங்கிலாந்துக்கு எதிராக மும்பையில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் அவர் சிறப்பாக விளையாடி சதம் (135 ரன்) அடித்தார்.  ஏற்கனவே அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் புஜாரா இரட்டை சதம் (206 ரன்) அடித்து இருந்தார். 7 டெஸ்டில் விளையாடிய அவர் 3 செஞ்சூரி அடித்து உள்ளார். தூண் என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட் ஓய்வு பெற்ற பிறகு அவரது இடமான 3-வது வரிசையில்தான் புஜாரா ஆடுகிறார்.  டிராவிட்...

தோல்வியை நோக்கி இந்தியா

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி தோல்வியை நோக்கி செல்கிறது. இந்தியா, இங்கிலாந்து அணிகள் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றன. ஆமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது.  இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் மும்பையில் நடக்கிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 327 ரன்கள் எடுத்தது. மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து 2 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்திருந்தது.  குக் சதம்: முதல் இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு கேப்டன் குக், பீட்டர்சன் நல்ல துவக்கம் கொடுத்தது....

தொடர்ந்து சொதப்பும் சச்சின்

ராஜ்யசபா எம்.பி., ஆகிவிட்ட சச்சின், கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து சொதப்புகிறார். நேற்றும் "போல்டான' இவர், சொந்த ஊர் ரசிகர்களை ஏமாற்றினார்.  கடந்த 23 ஆண்டுகளாக விளையாடி வரும் சச்சின், சமீப காலமாக ரன் எடுக்க திணறி வருகிறார். கடைசியாக விளையாடிய 6 டெஸ்டில், 9 இன்னிங்சில் 15, 8, 25, 13, 19, 17, 27, 13, 8 என, மொத்தம் 145 ரன்கள் தான் எடுத்துள்ளார். இதில் நான்கு முறை போல்டாகினார். தவிர, 192வது டெஸ்டில் விளையாடும் இவர், 24வது முறையாக இடதுகை சுழற்பந்து வீச்சாளரிடம் வீழ்ந்துள்ளார். அதிகபட்சமாக நியூசிலாந்தின் வெட்டோரியிடம் ஐந்து முறை அவுட்டானார்.  தென்...

புஜாரா அசத்தல் சதம் - 100வது டெஸ்டில் சேவக் ஏமாற்றம்

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் காம்பிர், சேவக்,சச்சின், போன்ற துவக்க வீரர்கள் சொதப்பினர். புஜாரா சதம் அடித்து கைகொடுக்க இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது. இந்தியா, இங்கிலாந்து அணிகள் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றன. ஆமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் மும்பையில் இன்று துவங்கியது. இதில் "டாஸ் வென்ற இந்திய...

ஐ.பி.எல்., அமைப்புக்கு ஜாக்பாட்

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, ஐ.பி.எல்., தொடருக்கான "டைட்டில் ஸ்பான்சர்' உரிமையை பெப்சி நிறுவனம் தட்டிச் சென்றது. இதற்காக ரூ. 396.8 கோடி வழங்குகிறது. இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில், "டுவென்டி-20' போட்டிகள், கடந்த ஐந்து ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்தது. இதன் "டைட்டில் ஸ்பான்சராக' டி.எல்.எப்., (ரூ. 250 கோடி) நிறுவனம் இருந்தது.  இதன் ஒப்பந்தத்தை புதுப்பிக்க, இந்திய கிரிக்கெட் போர்டு (ஐ.பி.எல்.,) அதிக தொகை எதிர்பார்த்தது. இதனால்,...

நூறில் நூறு - சாதிப்பாரா சேவக்?

இந்திய வீரர் சேவக், தனது 100வது டெஸ்டில் சதம் அடிக்க வேண்டும்,'' என, கபில்தேவ், வெங்சர்க்கார் விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்திய அணியின் அதிரடி துவக்க வீரர் சேவக், 34. இதுவரை 99 டெஸ்டில் விளையாடியுள்ள இவர், 23 சதம், 32 அரைசதம் உட்பட 8488 ரன்கள் எடுத்துள்ளார்.  இவர், வரும் 23ம் தேதி மும்பையில் துவங்கும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் களமிறங்கும் பட்சத்தில், 100வது டெஸ்டில் பங்கேற்பார்.  இங்கிலாந்துக்கு எதிரான முதல்...

சேவாக்-ன் 100-வது டெஸ்ட் போட்டி சதம்

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி துவக்க வீரரான வீரேந்திர சேவாக், இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8448 ரன்கள் குவித்துள்ளார்.  கடைசியாக அகமதாபாத்தில் அவர் விளையாடிய 99-வது போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக சதம் அடித்து அசத்தினார்.  இந்நிலையில், இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மும்பையில் 23-ம் தேதி தொடங்குகிறது. இப்போட்டி சேவாக்கிற்கு 100-வது டெஸ்ட் போட்டியாகும்.  இந்த போட்டியில் சேவாக் சதம்...

இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஒலிம்பிக் சங்கம் கண்டனம்

இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்டில், மைதானத்தில் இருந்து புகைப்படங்களை எடுக்க கெட்டி இமேஜஸ், ஆக்சன் இமேஜஸ் மற்றும் சில இந்திய ஏஜென்சிகளுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி மறுத்து விட்டது.  இதை கண்டித்து ஏ.எப்.பி., ராய்ட்டர்ஸ், ஏ.பி., போன்ற சர்வதேச செய்தி மற்றும் புகைப்பட நிறுவனங்கள் இந்த போட்டியை புறக்கணித்துள்ளன. கிரிக்கெட் இணையதளமான ஈ.எஸ்.பி.என்-கிரிக் இன்போவும் இந்த டெஸ்ட் தொடர்பான நேரடி படங்களை வெளியிடவில்லை.  இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஓ.சி.) கண்டனம் தெரிவித்துள்ளது....

பிப்ரவரியில் இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்

அடுத்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. இப் போட்டிகள் கான்பூர், சென்னை, தில்லி, மொஹாலி ஆகிய நகரங்களில் நடைபெறுகின்றன என்று பிசிசிஐ தலைமைச் செயல் அதிகாரி ரத்னாகர் ஷெட்டி தெரிவித்துள்ளார். இதேபோல் பயிற்சிப் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி விளையாடுகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் ஒருநாள் போட்டிகள் மற்றும் இருபது ஓவர் போட்டிகள் இடம்பெறவில்லை. எனினும் ஆஸ்திரேலிய அணியின் இந்திய சுற்றுப்பயணம் குறித்த முழு விவரம், ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய-மேற்கிந்தியத்...

இரட்டை சதம் அடித்த புஜாராவுக்கு கபில்தேவ் பாராட்டு

இங்கிலாந்துக்கு எதிராக அகமதாபாத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் புஜாரா இரட்டை சதம் அடித்தார்.  அவர் 513 நிமிடங்கள் களத்தில் நின்று 389 பந்துகளில் 21 பவுண்டரியுடன் 206 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். தனது 6-வது டெஸ்டில் புஜாரா இரட்டை சதம் அடித்து முத்திரை பதித்தார்.  டெஸ்டில் அவரது 2-வது சதம் ஆகும். கடந்த ஆகஸ்ட் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக புஜாரா தனது முதல் சதத்தை (159 ரன்) அடித்து இருந்தார்.  இரட்டை சதம்...

சர்வதேச கிரிக்கெட்டில் 23 ஆண்டுகளை நிறைவு செய்த தெண்டுல்கர்

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான சச்சின் தெண்டுல்கர் 1989-ம் ஆண்டு நவம்பர் 15-ந்தேதி பாகிஸ்தானுக்கு எதிரான கராச்சி டெஸ்டில் அறிமுகம் ஆனார். 16 வயது மற்றும் 223 நாட்களில் அவர் சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆனார். தனது முதல் ஆட்டத்தில் அவர் 15 ரன்கள் எடுத்தார். 39 வயதான அவர் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார்.  5 அடி 5 அங்குலம் உயரம் கொண்ட தெண்டுல்கர் 190 டெஸ்ட்டில் 15,533 ரன்னும், 463 ஒருநாள் போட்டியில் 18,426 ரன்னும் எடுத்துள்ளார்.  சர்வதேச...

சச்சினை மட்டும் சார்ந்திருக்கலாமா?

இங்கிலாந்து தொடரில் இந்திய அணி, சச்சினை மட்டும் சார்ந்து இருக்கக் கூடாது, என, கபில் தேவ் தெரிவித்தார். இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் இன்று ஆமதாபாத்தில் துவங்குகிறது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் கூறியது: இங்கிலாந்து தொடரில் அனைவரது கவனமும் சச்சின் மீது தான் இருக்கும். அவர் இந்திய அணியின் முக்கிய வீரர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனாலும் அவரை மட்டும் சார்ந்து இருக்கக் கூடாது. இளம் வீரர்கள்...

இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் சாதிப்பார்கள்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் சாதிப்பார்கள்,'' என, முன்னாள் இந்திய கேப்டன் அஜித் வடேகர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நாளை ஆமதாபாத்தில் துவங்குகிறது.  இதுகுறித்து முன்னாள் இந்திய வீரர் அஜித் வடேகர் கூறியது: கடந்த 1993ம் ஆண்டு இந்தியா வந்த கிரகாம் கூச் தலைமையிலான இங்கிலாந்து அணியின் மேனேஜராக டங்கன் பிளட்சர் இருந்தார்.  இந்திய சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாத இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள்...

அசாருதீன் மீதான தடை நீக்கப்படுமா?

சூதாட்டப் புகாரில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனுக்கு, கடந்த 2000-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வாழ்நாள் தடை விதித்தது. இதனை எதிர்த்து அசாருதீன் ஆந்திர மாநில ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது அசாருதீனுக்கு வாழ்நாள் தடை விதித்தது சட்டவிரோதம் என்றும், இந்த தடை விலக்கப்பட வேண்டும் என்றும் கோர்ட் தெரிவித்தது. இதனால் அசாருதீன் இப்போது நிம்மதி அடைந்தபோதும், ஏற்கனேவே...

கேப்டன் தோனிக்கு டிராவிட் ஆதரவு

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் தோனி நீடிக்கலாம். ஆனால் விரைவில் இவரது சுமையை குறைக்க வேண்டும்,'' என, முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் வெற்றிக் கேப்டனாக ஜொலிப்பவர் தோனி. இவரது தலைமையில் கடந்த ஆண்டு இந்திய அணி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ச்சியாக எட்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்தது.  இதன்மூலம் டெஸ்ட் ரேங்கிங்கில் "நம்பர்-1' இடத்தை இழந்தது. இதனால் டெஸ்ட் அணிக்கான கேப்டன்...

உலக கோப்பை - இந்தியா, பாக்., அரையிறுதியில் சூதாட்டம்

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய உலக கோப்பை அரையிறுதியில் கிரிக்கெட் சூதாட்டம் நடந்ததாக வெளியான செய்திகளை பி.சி.சி.ஐ., மறுத்துள்ளது. கடந்த 2011ல் மொகாலியில் நடந்த உலக கோப்பை(50 ஓவர்) அரையிறுதியில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தியது.  இதில், கிரிக்கெட் சூதாட்டம் நடந்ததாக இங்கிலாந்து பத்திரிகையாளர் எட் ஹாக்கின்ஸ் எழுதியுள்ள புத்தகத்தில் சந்தேகம் கிளப்பியுள்ளார்.  இப்போட்டியில், "இந்திய அணி முதலில் "பேட்' செய்து 260 ரன்கள் எடுக்கும்....

தெண்டுல்கரை தொட இன்னும் 7 சதம் தேவை - காலிஸ்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்க வீரர் காலிஸ் இன்று சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 156-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 44-வது செஞ்சூரி ஆகும்.  முதல் இடத்தில் இருக்கும் தெண்டுல்கரை தொட இன்னும் 7 சதம் தேவை.  தெண்டுல்கர் 190 டெஸ்டில் விளையாடி 51 சதம் அடித்து முதல்இடத்தில் உள்ளார். டெஸ்டில் அதிக சதம் அடித்த “டாப் 6” வீரர்கள் வருமாறு:-  தெண்டுல்கர் (இந்தியா)- 51 சதம் (190 டெஸ்ட்)  காலிஸ் (தென்ஆப்பிரிக்கா)- 44 சதம் (156 டெஸ்ட்)  பாண்டிங் (ஆஸ்திரேலியா)- 41 சதம் (166 டெஸ்ட்)  டிராவிட்...

இங்கிலாந்து அணியை பழி வாங்குவோம்- யுவராஜ்சிங்

இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது தான் மோதிய 4 டெஸ்டிலும் தோற்று “ஒயிட்வாஷ்” ஆனது. தற்போது கூக் தலைமை யிலான இங்கிலாந்து அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதல் டெஸ்ட் வருகிற 15-ந்தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது.  இந்திய அணிக்கு இந்த டெஸ்ட் தொடர் பழிவாங்கும் தொடராக இருக்கும் என்று கருதப்படுகிறது. இங்கிலாந்துக்கு இந்திய அணி இந்த தொடரில் பதிலடி கொடுக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு...

நம்பர்-1 இடத்தை நோக்கி இந்தியா

ஐ.சி.சி., டெஸ்ட் ரேங்கிங்கில் இந்திய அணி மீண்டும் "நம்பர்-1' இடம் பிடிக்கும்,'' என, இந்திய கேப்டன் தோனி நம்பிக்கை தெரிவித்தார். கடந்த ஆண்டு இங்கிலாந்து பயணத்தின் போது டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, டெஸ்ட் ரேங்கிங்கில் முதலிடத்தை பறிகொடுத்தது. தற்போது 106 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ள இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.  முதலிரண்டு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் சமீபத்தில்...

கேப்டன் ஆகிறார் ரோகித் சர்மா

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் விளையாடும் மும்பை அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில், ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடருக்கான முதல் சுற்று லீக் போட்டிகள் நாட்டின் முக்கிய நகரங்களில் நடந்தது. இதில் மும்பையில் நடந்த "ஏ பிரிவு லீக் போட்டியில் மும்பை, ரயில்வேஸ் அணிகள் மோதின.  இப்போட்டி "டிராவில் முடிந்த போதிலும், முதல் இன்னிங்சில் பெற்ற முன்னிலை அடிப்படையில் மும்பை அணிக்கு 3 புள்ளிகள் கிடைத்தது. இரண்டாவது...

சச்சினுக்கு ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா விருது

இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு ஆஸ்திரேலியா அரசு ,ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா விருது வழங்கி கவுரவித்தது. ஆஸ்திரேலியா அரசின் விருது பெறும் இரண்டாவது நபர் சச்சின் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் சதத்தில் சதம் உட்பட பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜ்யசபா எம்.பி.,யாக பதவி ஏற்றார். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை...

யுவராஜ், ஹர்பஜனுக்கு மீண்டும் வாய்ப்பு

இங்கிலாந்து அணிக்கு எதிரான, முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. எதிர்பார்த்தது போல ரெய்னா நீக்கப்பட்டார். ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் மீண்டும் இடம் பெற்றனர். இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் 2 டெஸ்டில் பங்கேற்கும், 15 பேர் கொண்ட இந்திய அணியை, சந்தீப் பாட்டீல் தலைமையிலான புதிய தேர்வுக்குழு நேற்று அறிவித்தது. இதில் கேப்டன்...