ஜடேஜாவுக்கு தடை நீடிப்பு: மும்பை அணிக்கு ஐ.பி.எல். எச்சரிக்கை

ஐ.பி.எல். போட்டியில் ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாட ஒப்பந்தமாகி இருந்தார். 2008-2009ம் ஆண்டு போட்டியில் அந்த அணிக்காக விளையாடினார்.

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி தொடங்கும் முன்பு அவர் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பேரம் பேசினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்திடம் கலந்து ஆலோசிக்காமல் அவர் இப்படி செய்தார். வீரர்களின் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் ஆட ஜடேஜாவுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து அவர் அப்பீல் செய்தார். இதை விசாரிக்க டெல்லி கிரிக்கெட் சங்க தலைவரும், முன்னணி வக்கீலுமான அருண் ஜேட்லியை ஐ.பி.எல். அமைப்பு நியமித்தது.

அருண்ஜேட்லி தனது அறிக்கையை ஐ.பி.எல். அமைப்பிடம் தாக்கல் செய்துள்ளார். ஜடேஜாவின் தடை செல்லும் என்று அறிக்கையில் குறிப்பட்டு உள்ளார்.


அதே நேரத்தில் ஜடேஜாவிடம் பேச்சு வார்த்தை நடத்தியதற்காக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment