பாகிஸ்தான் மூத்த கிரிக்கெட் வீரர்களுக்கு காலவரையற்ற தடை

பாகிஸ்தான் மூத்த கிரிக்கெட் வீரர்கள் பலருக்கு அந்நாட்டுக் கிரிக்கெட் வாரியம் தடைவிதித்துள்ளது. அண்மையில் நடந்த ஆஸ்திரேலியாவுடனான போட்டிகளின்போது அணிக்குள் ஏற்பட்ட சர்ச்சைகளுக்காகவும், மோசமாக ஆடியதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

முகமது யூசுப், யூனிஸ் கான் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் ஆட காலவரையற்ற தடை விதிக்கப்பட்டிருக்கிறது. கம்ரன் அக்மல் மற்றும் உமர் அக்மல் ஆகியோருக்கு முறையே ரூ. 30 லட்சம், ரூ. 20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ஆஸ்திரேலிய பயணத்தின்போது பந்தைச் சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆல்ரவுண்டர் சாஹிப் அப்ரிதிக்கு ரூ.3 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டதுடன் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.

0 comments:

Post a Comment