ஜடேஜா தடை நீக்கம்

ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்க, ரவிந்திர ஜடேஜாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து டில்லி கிரிக்கெட் சங்க தலைவர் அருண் ஜெட்லி உடனடியாக விசாரிக்க உள்ளார்.

இதையடுத்து ஜடோஜா மீதான தடை விலக்கிக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடிய, இந்திய இளம் "ஆல் ரவுண்டர்' ரவிந்திர ஜடேஜாவின் ஒப்பந்த காலத்தை, அணி நிர்வாகம் புதுப்பிக்கவில்லை. இதனால் இவர், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) அனுமதியில்லாமல், வேறு அணி உரிமையாளர்களை தொடர்பு கொண்டதால், ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்க, ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டார்.

தடைகுறித்து ராஜஸ்தான் நிர்வாகம், ஐ.பி.எல்.,க்கு எழுதிய கடிதத்தில்,"" ஜடேஜாவின் செயலுக்கு மும்பை இந்தியன்ஸ் அணியினர் பின்னணியில் இருந்திருக்கலாம். அவர்கள், இவருக்கு ஆசை காட்டியதால் இப்படி செயல்பட்டார்,'' என தெரிவித்து இருந்தது.

இதுகுறித்து ஐ.பி.எல்., நிர்வாகக்குழுவில் விசாரிக்கப்பட்டது. பின், ஜடேஜாவுக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் உள்ள தொடர்பு குறித்து உடனடியாக விசாரித்து, வரும் 25ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, டில்லி கிரிக்கெட் சங்க தலைவர் அருண் ஜெட்லியை, ஐ.பி.எல்.,நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதனிடையே தற்போது நடக்கும் மூன்றாவது ஐ.பி.எல்., தொடரில் இந்த அணி மோசமாக விளையாடி வருகிறது. இதுகுறித்து ராஜஸ்தான் அணியின் முக்கிய அதிகாரி மோரிஸ் கூறுகையில்,"" ஜடேஜா மீண்டும் அணிக்கு திரும்பினால், சிறப்பாக செயல்படலாம் என நம்புகிறோம்,'' என்றார்.

0 comments:

Post a Comment