யூனிஸ், யூசுப், மாலிக் நீக்கம்: பாக்., அதிரடி

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் (பி.சி.பி.,), ஒப்பந்தப் பட்டியலிலிருந்து, யூனிஸ் கான், முகமது யூசுப், சோயப் மாலிக், அக்தர் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் ஆஸ்திரேலிய தொடரில் சொதப்பிய பாகிஸ்தான் அணி வீரர்கள் மீது, பி.சி.பி., கடுமையான நடவடிக்கை எடுத்தது. யூனிஸ் கான், முகமது யூசுப் ஆகியோர் வாழ்நாள் தடையை சந்தித்துள்ளனர். சோயப் மாலிக், ராணா ஆகியோருக்கு ஒரு ஆண்டு தடை வழங்கப்பட்டுள்ளது.

இத்தொடரில் பந்தை கடித்து சேதப்படுத்திய அப்ரிதிக்கு ரூ. 30 லட்சமும், கம்ரான், உமர் அக்மலுக்கு ரூ. 50 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டது. இத்தகைய சூழ்நிலையில் வீரர்களுக்கான ஒப்பந்தப்பட்டியலை நேற்று வெளியிட்டது, அந்நாட்டு கிரிக்கெட் போர்டு. ஏ, பி, சி என மூன்று பிரிவுகளில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

அதிரடி நீக்கம்:

தடையை சந்தித்துள்ள முன்னாள் கேப்டன்களான யூனிஸ் கான், முகமது யூசுப், சோயப் மாலிக் மூவரும் இப்பட்டியலில் இடம் பெறவில்லை. வேகப்பந்து வீச்சாளர்களான அக்தர், தன்வீர், ராணா ஆகியோருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 18 வீரர்கள் ஒப்பந்தப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

"ஏ' கிரேடு: அப்ரிதி, கம்ரான் அக்மல், கனேரியா, சல்மான் பட், அப்துல் ரசாக் மற்றும் முகமது ஆசிப்.

"பி' கிரேடு: உமர் அக்மல், முகமது ஆமெர், சயீத் அஜ்மல், பைசல் இக்பால், மிஸ்பா, இம்ரான் பர்கத்.

"சி' கிரேடு: பவத் ஆலம், யாசிர் அராபத், முகமது ஹபீஸ், வாகப் ரியாஸ் மற்றும் அப்துல் ரெஹ்மான்.

0 comments:

Post a Comment