அப்ரிதி கைகொடுப்பார்: அக்ரம்

பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சயீத் அப்ரிதி, "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் சாதிப்பார்,'' என முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


வெஸ்ட் இண்டீசில், "டுவென்டி-20' உலக கோப்பை கிரிக்கெட் (ஏப். 30-மே 16) தொடர் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சயீத் அப்ரிதி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கூறியதாவது: பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாகும் தகுதி, அப்ரிதியிடம் நிறைய உள்ளது. "டுவென்டி-20' போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் இவர், உலக கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் அந்தஸ்தை தக்கவைத்துக்கொள்ள போராடுவார். இதன்மூலம் பாகிஸ்தான் அணி மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்குவார் என நம்புகிறேன்.

சமீபத்தில் இவர் பந்தை கடித்து ஏற்படுத்திய சர்ச்சையை மறந்துவிடுவது நல்லது. ஏனெனில் இது, உலக கோப்பை தொடரில் இவரது இயல்பான ஆட்டத்தை, வெளிப்படுத்த தடங்கலாக அமையலாம்.


உலக கோப்பை தொடரில், அப்ரிதியின் வெற்றிக்கு புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள வக்கார் யூனிஸ் கைகொடுப்பார். ஏனெனில், பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாகவே, வக்காரிடம் இருந்தது. இதனால், அணியின் வெற்றிக்கு இவரது பங்களிப்பு நிச்சயம் கைகொடுக்கும்.

பாகிஸ்தான் அணியினர், உலக கோப்பை தொடருக்கு முன், உடல் மற்றும் மன ரீதியாக முழுதகுதியுடன் இருக்க வேண்டும். ஏனெனில், "டுவென்டி-20' போட்டிகளில் சாதிப்பது என்பது எளிதான காரியமல்ல.

இவ்வாறு அக்ரம் கூறினார்.

0 comments:

Post a Comment