எட்டிப்பறக்குது ஐ.பி.எல்.,வர்த்தகம்; புனே அணி ரூ. 1, 700 கோடி; கொச்சி அணி ரூ. 1, 533 கோடி

ஐ.பி.எல்., சீசன் 4 டுவென்டி-20 கிரிக்கெட் அணிகளில் புதிதாக 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த புதிய அணிகள் இது வரை இல்லாத அளவுக்கு அமோக விலைக்கு ஏலம் போயுள்ளது.


சென்னையில் நடந்த இந்த ஏலத்தில் 2 அணிகளும் சேர்த்து ஐ.பி.எல்., அணிகள் 10 ஆக உயர்ந்துள்ளது. இது வரை ஐ.பி.எல்., அணியின் அதிகபட்ச விலை மும்பை இந்தியன்ஸ் அணி ( ரூ. 800 கோடிக்கு ) ஏலம் போனது. தற்போது ஆயிரத்து 500 கோடியை தாண்டி போயுள்ளது குறிப்பிடத்தக்கது.

94 போட்டிகளைக் கொண்ட ஐ.பி.எல்., சீசன் 4 டுவென்டி-20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 2 புதிய அணிகள் குறித்த விபரத்தை ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி சென்னையில் இன்று வெளியிட்டார். சுமார் 5 நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றன.


ஆனால் ஏலத்தின் முடிவில் சகாரா நிறுவனம் புனே அணியையும், ரென்டிஸ்வோஸ் நிறுவனம் ‌கொச்சி அணியையும் வென்றதாக அறிவிக்கப்பட்டது. புனே, கொச்சி தவிர ஆமதாபாத், நாக்பூர், கான்பூர், தர்மசாலா, விஷக், ராஜ்கோட், கட்டாக், பரோடா, இந்தூர், குவாலியர் உள்ளிட்ட அணிகளும் ஏலத்தில் கலந்து கொண்டன.

இதில் சகாரா நிறுவனம் புனே அணியை 370 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும், (ரூ.1, 702 கோடி), ரென்டிஸ்வோஸ் நிறுவனம் கொச்சி அணியை 333.33 மில்லியன் டாலருக்கும் (ரூ.1, 533 கோடி) ஏலத்தில் எடுத்தன.


இவர்களுக்கு அடுத்தபடியாக ஏலத்தில் அதிக தொகையை அறிவித்த நிறுவனம் வீடியோகான் என்பது குறிப்பிடத்தக்கது. வீடியோகான் நிறுவனத்துடன் இணைந்து பாலிவுட் நட்சந்திரங்களான சைஃப் அலிகான் மற்றும் கரீனா கபூர் இணைந்து புதிய அணிகளை வாங்க முயற்சி மேற்கொண்டனர் ஆனால் முடியாமல் போனது.

பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்பார்கள் :


ஏலம் முடிந்த பின்னர் ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி கூறுகையில் ; இந்த ஒப்பந்தம் அடுத்த 10 ஆண்டுகள் வரை நீடிக்கும் எனவும், ஐ.பி.எல்., தொடரில் 10 அணிகளுக்கு மேல் சேர்க்கப்படாது எனவும், ஐ.பி.எல்., போட்டிகளை வெளிநாடுகளில் நடத்தும் எண்ணம் எதுவும் இல்லை என்றார்.


2011ம் ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல்., சீசன் 4 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்பார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.லலித் மோடி தெரிவித்தார்.

0 comments:

Post a Comment