இந்திய வீரர்கள் காயம்: உலககோப்பையில் பாதிப்பு

மூன்றாவது ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர் துவங்கிய ஒரு வாரத்திற்குள் இந்திய வீரர்கள் பலர் காயம் அடைந்துள்ளனர். இதனால் அடுத்த மாதம் நடக்க "டுவென்டி-20' உலககோப்பையில் இந்திய அணி சாதிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மூன்றாவது ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. இத்தொடர் துவங்கிய சில நாட்களுக்குள் பலர் காயத்துக்கு ஆளாகியுள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்களான ஸ்மித், மஸ்காரனாஸ் காயம் காரணமாக தொடரை விட்டு விலகிவிட்டனர்.

தோனி, காம்பிர் காயம்:

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி, டில்லி டேர் டெவில்ஸ் கேப்டன் காம்பிர், ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் யூசுப் பதான் ஆகியோரும் காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். டில்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் நெஹ்ராவும் காயமடைந்துள்ளார். ஒட்டுமொத்தமாக இத்தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலககோப்பையில் சிக்கல்:

ஐ.பி.எல்., தொடர் துவங்கிய ஒரு வாரத்திற்குள் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. வரும் ஏப். 25 வரை ஐ.பி.எல்., நடக்க உள்ளது. இதனால் மேலும் ஒரு சில இந்திய வீரர்கள் காயம் அடைய வாய்ப்பு உள்ளது.

வரும் ஏப். 30 ம் தேதி வெஸ்ட் இண்டீசில் 3 வது "டுவென்டி-20' உலககோப்பை துவங்குகிறது. இந்நிலையில் முன்னணி இந்திய வீரர்கள் சிலர் இத்தொடரில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. தவிர, காயத்துடன் பங்கேற்றாலும், இந்திய அணியால் சாதிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும்.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளை சேர்ந்த ஒரு சிலர் மட்டுமே, ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்று உள்ளனர். பாகிஸ்தானிலிருந்து ஒருவர் கூட இடம் பெறவில்லை. இதனால் அந்த அணிகளுக்கு உலககோப்பை தொடரில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை.

0 comments:

Post a Comment