சென்னை கிங்ஸ் வீழ்ச்சிக்கு என்ன காரணம்?

ஐ.பி.எல்., தொடர் அறிமுகமானபோது சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கு ரசிகர்களிடம் இருந்த வரவேற்பும் ஆதரவும், தற்போது குறையத்துவங்கியுள்ளது. மற்ற ஏழு அணிகளுடன் ஒப்பிடும்போது, சென்னை அணிதான் மிக மோசமாக இருக்கிறது. இதற்குகாரணம் என்ன?கிரிக்கெட் புக்கிகளால் மிகைப்படுத்தபட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் முதலாம் ஆண்டு பைனல் வரை வந்து தோற்றது. இரண்டாம் ஆண்டு அரையிறுதி வரை எட்டி பார்த்தது. இம்முறை அரையிறுதிக்கு முன்னேறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இன்று சென்னையில் நடக்கும் லீக் போட்டியில், கும்ளே தலைமையிலான பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. தொடர்ந்து...

சானியா-சோயப் மாலிக் திருமணம்

இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.சர்வதேச டென்னிஸ் அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார் சானியா மிர்சா. கடந்த 2009, ஜூலை 10ம் தேதி சானியா மற்றும் அவரது குழந்தை பருவ நண்பரான முகமது சோஹ்ராப் மிர்சா இடையே திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நடந்தது.இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த ஜனவரி மாதம் திடீரெனநிச்சயதார்த்தம் ரத்து செய்யப் பட்டது. இந்நிலையில் நேற்று பாகிஸ்தானில் உள்ள தனியார் டிவி சேனலில்,...

பந்து வீச தாமதம்: சங்ககராவுக்கு தடை

ஐ.பி.எல்., தொடரில் மூன்றாவது முறையாக தாமதமாக பந்துவீசிய, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் சங்ககராவுக்கு, ரூ. 23 லட்சம் அபராதத்துடன், ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.மூன்றாவது ஐ.பி.எல்., தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதில் நேற்று முன்தினம் மொகாலியில் நடந்த லீக் போட்டியில் பஞ்சாப், கோல்கட்டா அணிகள் மோதின. இதில் பஞ்சாப் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில், தோல்வியடைந்து ஏமாற்றியது. இதுவரை விளையாடிய ஆறு போட்டியில், ஒன்றில் மட்டுமே வெற்றி கண்ட பஞ்சாப் அணி, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது.மூன்றாவது முறை:இப்போட்டியில் கிங்ஸ் லெவன்...

ஜடேஜாவுக்கு தடை நீடிப்பு: மும்பை அணிக்கு ஐ.பி.எல். எச்சரிக்கை

ஐ.பி.எல். போட்டியில் ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாட ஒப்பந்தமாகி இருந்தார். 2008-2009ம் ஆண்டு போட்டியில் அந்த அணிக்காக விளையாடினார். இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி தொடங்கும் முன்பு அவர் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பேரம் பேசினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்திடம் கலந்து ஆலோசிக்காமல் அவர் இப்படி செய்தார். வீரர்களின் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் ஆட ஜடேஜாவுக்கு தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் அப்பீல் செய்தார். இதை விசாரிக்க டெல்லி கிரிக்கெட் சங்க தலைவரும், முன்னணி வக்கீலுமான அருண் ஜேட்லியை...

யூசுப் பதானை திட்டிய சைமண்ட்ஸ்

சைமண்ட்ஸ் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவர், தன்னை திட்டியதாக யூசுப் பதான் குற்றம்சாட்டியுள்ளார்.ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் சைமண்ட்ஸ். ஒழுங்கீனத்துக்கு பெயர் போன இவர், எதிரணி வீரர்களை வார்த்தையால் திட்டி, சர்ச்சை கிளப்புவார். கடந்த 2008ல் நடந்த சிட்னி டெஸ்டில் ஹர்பஜன் மற்றும் சைமண்ட்ஸ் இடையே மோதல் ஏற்பட்டது. தற்போதை ஐ.பி.எல்., தொடரில் யூசுப் பதானை திட்டி, பிரச்னை கிளப்பியுள்ளார். நேற்று முன்தினம் ஆமதாபாத்தில் நடந்த போட்டியில் ராஜஸ்தான், டெக்கான் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் வீரர் யூசுப் பதான், பேட்டிங் செய்ய வந்தபோது, டெக்கான் அணிக்காக...

பி.சி.சி.ஐ.,க்கு போட்டியாக ஐ.பி.எல்.,

பி.சி.சி.ஐ.,க்கு போட்டியாக ஐ.பி.எல்., அமைப்பு வளர்ச்சி அடைந்து வருகிறது. ஒளிபரப்பு உரிமை மூலம் மட்டும் நாள் ஒன்றுக்கு 6 கோடி ரூபாய் வருமானம் கிடைப்பதாக ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) சார்பில் இந்தியன் பிரிமியர் லீக்(ஐ.பி.எல்.,) துவங்கப்பட்டது. தற்போது ஐ.பி.எல்., மூன்றாவது "டுவென்டி-20 தொடர் வெற்றிகரமாக நடக்கிறது. இரண்டு புதிய அணிகளுக்கான ஏலம் மூலம் சமீபத்தில் ஐ.பி.எல்., அமைப்புக்கு 3 ஆயிரத்து 235 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது. தவிர, இம்முறை 5 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது....

காம்பிருக்கு பி.சி.சி.ஐ., எச்சரிக்கை

காம்பிர், நெஹ்ரா முன் அனுமதி பெறாமல் இலங்கை சென்று சிகிச்சை மேற்கொண்டது தொடர்பாக சர்ச்சை வெடித்துள்ளது. இருவரையும் பி.சி.சி.ஐ., கடுமையாக எச்சரித்துள்ளது. தவிர, இது குறித்து விளக்கம் அளிக்குமாறு டில்லி டேர்டெவில்ஸ் அணியின் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மூன்றாவது ஐ.பி.எல்., தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதில், டில்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக காம்பிர் உள்ளார். மும்பை அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது, இவரது பின் தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதே போல டில்லி அணியின் வேகப்பந்துவீச்சாளரான நெஹ்ராவுக்கு, பயிற்சியின் போது விலா எலும்பு...

அப்ரிதி கைகொடுப்பார்: அக்ரம்

பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சயீத் அப்ரிதி, "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் சாதிப்பார்,'' என முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.வெஸ்ட் இண்டீசில், "டுவென்டி-20' உலக கோப்பை கிரிக்கெட் (ஏப். 30-மே 16) தொடர் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சயீத் அப்ரிதி நியமிக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கூறியதாவது: பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாகும் தகுதி, அப்ரிதியிடம் நிறைய உள்ளது. "டுவென்டி-20' போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் இவர், உலக கோப்பை...

ஐ.பி.எல்., மதிப்பு ரூ. 18 ஆயிரம் கோடி!

ஐ.பி.எல்., அமைப்பு வர்த்தக ரீதியாக அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. இதன் நிறுவன மதிப்பு இந்த ஆண்டு 18 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில் இடம் பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்சின் மதிப்பு அதிகபட்சமாக ரூ. 220 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியன் பிரிமியர் லீக்(ஐ.பி.எல்.,) அமைப்பு கடந்த 2008ல் துவங்கப்பட்டது. இதன் நிறுவன மதிப்பு ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது. தற்போதைய வருமானம், எதிர்காலத்தில் கிடைக்கும் வருமானம், சர்வதேச சந்தையில் உள்ள அந்தஸ்து போன்றவற்றை அடிப்படையாக கொண்டு நிறுவனத்தின் மதிப்பு கணக்கீடு செய்யப்படுகிறது. இதன்படி கடந்த ஆண்டை...

ஜடேஜா தடை நீக்கம்

ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்க, ரவிந்திர ஜடேஜாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து டில்லி கிரிக்கெட் சங்க தலைவர் அருண் ஜெட்லி உடனடியாக விசாரிக்க உள்ளார். இதையடுத்து ஜடோஜா மீதான தடை விலக்கிக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது. கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடிய, இந்திய இளம் "ஆல் ரவுண்டர்' ரவிந்திர ஜடேஜாவின் ஒப்பந்த காலத்தை, அணி நிர்வாகம் புதுப்பிக்கவில்லை. இதனால் இவர், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) அனுமதியில்லாமல், வேறு அணி உரிமையாளர்களை தொடர்பு கொண்டதால், ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்க, ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டார்.தடைகுறித்து ராஜஸ்தான்...

30 வருட சாதனைக்கு சொந்தக்காரர்

தேசிய மற்றும் ஆசிய அளவிலான நீளம் தாண்டுதல் போட்டிகளில் 30 ஆண்டுகள் சாதனைக்கு சொந்தக்காரர் பிரபல தடகள வீரர் டி.சி.யோகனன்.இவர் கேரள மாநிலம் கொல்லம் அருகேயுள்ள குண்டாரா கிராமத்தில் 1947-ம் ஆண்டு மே 19-ம் தேதி பிறந்தார். சிறுவயதிலேயே நீளம் தாண்டுதலில் அதீத ஆர்வம் கொண்டிருந்த யோகனன், கால்வாயை தாண்ட முயற்சித்தபோது தவறி விழுந்தார். அதைப்பார்த்த அவரது தந்தை கால்வாயைத் தாண்டினால் எலுமிச்சை பழச்சாறு தருவதாக அறிவித்தார். அப்போது வெற்றிகரமாக கால்வாயைத் தாண்டினார் யோகனன்.அது முதற்கொண்டு நீளம் தாண்டுதலில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். முதன்முறையாக பெங்களூரில்...

எட்டிப்பறக்குது ஐ.பி.எல்.,வர்த்தகம்; புனே அணி ரூ. 1, 700 கோடி; கொச்சி அணி ரூ. 1, 533 கோடி

ஐ.பி.எல்., சீசன் 4 டுவென்டி-20 கிரிக்கெட் அணிகளில் புதிதாக 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த புதிய அணிகள் இது வரை இல்லாத அளவுக்கு அமோக விலைக்கு ஏலம் போயுள்ளது. சென்னையில் நடந்த இந்த ஏலத்தில் 2 அணிகளும் சேர்த்து ஐ.பி.எல்., அணிகள் 10 ஆக உயர்ந்துள்ளது. இது வரை ஐ.பி.எல்., அணியின் அதிகபட்ச விலை மும்பை இந்தியன்ஸ் அணி ( ரூ. 800 கோடிக்கு ) ஏலம் போனது. தற்போது ஆயிரத்து 500 கோடியை தாண்டி போயுள்ளது குறிப்பிடத்தக்கது. 94 போட்டிகளைக் கொண்ட ஐ.பி.எல்., சீசன் 4 டுவென்டி-20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 2 புதிய அணிகள் குறித்த விபரத்தை ஐ.பி.எல்., தலைவர் லலித்...

யூனிஸ், யூசுப், மாலிக் நீக்கம்: பாக்., அதிரடி

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் (பி.சி.பி.,), ஒப்பந்தப் பட்டியலிலிருந்து, யூனிஸ் கான், முகமது யூசுப், சோயப் மாலிக், அக்தர் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் ஆஸ்திரேலிய தொடரில் சொதப்பிய பாகிஸ்தான் அணி வீரர்கள் மீது, பி.சி.பி., கடுமையான நடவடிக்கை எடுத்தது. யூனிஸ் கான், முகமது யூசுப் ஆகியோர் வாழ்நாள் தடையை சந்தித்துள்ளனர். சோயப் மாலிக், ராணா ஆகியோருக்கு ஒரு ஆண்டு தடை வழங்கப்பட்டுள்ளது. இத்தொடரில் பந்தை கடித்து சேதப்படுத்திய அப்ரிதிக்கு ரூ. 30 லட்சமும், கம்ரான், உமர் அக்மலுக்கு ரூ. 50 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டது. இத்தகைய சூழ்நிலையில்...

இந்திய வீரர்கள் காயம்: உலககோப்பையில் பாதிப்பு

மூன்றாவது ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர் துவங்கிய ஒரு வாரத்திற்குள் இந்திய வீரர்கள் பலர் காயம் அடைந்துள்ளனர். இதனால் அடுத்த மாதம் நடக்க "டுவென்டி-20' உலககோப்பையில் இந்திய அணி சாதிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மூன்றாவது ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. இத்தொடர் துவங்கிய சில நாட்களுக்குள் பலர் காயத்துக்கு ஆளாகியுள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்களான ஸ்மித், மஸ்காரனாஸ் காயம் காரணமாக தொடரை விட்டு விலகிவிட்டனர்.தோனி, காம்பிர் காயம்: சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி, டில்லி டேர் டெவில்ஸ் கேப்டன் காம்பிர், ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் யூசுப்...