தேர்வு எழுத தோனிக்கு சலுகை

இந்திய அணி கேப்டன் தோனி, தனது பி.காம்.,பரீட்சையை, அவர் விரும்பும் தேர்வு மையத்தில் எழுதலாம்,'' என, கல்லு<õரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்திய அணியின் கேப்டன் தோனி, கடந்த 2008 ல் ராஞ்சியில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் பி.காம்., சேர்ந்தார். பின் கிரிக்கெட் போட்டிகளால் அவரால் படிப்பை தொடர முடியவில்லை. தற்போது பி.காம்., தேர்வுகளை எழுத, தோனி விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கல்லு<õரி டீன் டாக்டர் ஜெயந்த் சின்கா கூறியது:

கடந்த ஒரு மாதத்துக்கு முன், தோனியிடம் பேசினேன். அவர் பி.காம்., தேர்வுகளை எழுத ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார். ஆனால் அவருக்குள்ள "பிசியான' கிரிக்கெட் அட்டவணையில், கல்லூரிக்கு வந்து தேர்வெழுத முடியாத நிலை உள்ளது.

அவர் விருப்பப்பட்டால், வேறு மையங்களில், தேர்வெழுத ஏற்பாடு செய்து தரப்படும். ஒருவேளை கல்லூரிக்கு வெளியே வேறு நகரத்தில் தேர்வெழுத விரும்பினால், அதையும் பரிசீலனை செய்ய நிர்வாகம் தயாராக உள்ளது. இவ்வாறு சின்கா கூறினார்.


தேர்வு எழுதுவாரா?

வரும் பிப்ரவரியில் தென் ஆப்ரிக்க தொடர், அடுத்து மூன்றாவது ஐ.பி.எல்., தொடர், பின் வெஸ்ட் இண்டீசில் உலக கோப்பை "டுவென்டி-20' என வரிசையாக கிரிக்கெட் தொடர் உள்ள நிலையில், இந்த ஆண்டும் தோனி தேர்வு எழுதுவது சந்தேகம்.

0 comments:

Post a Comment