தொடர்ந்து 5-வது சதம் சாதனைக்காக ஆடவில்லை

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் கவுதம் காம்பீர். வங்காள தேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் அவர் 116 ரன்கள் எடுத்தார். டெஸ்ட் போட்டியில் காம்பீர் தொடர்ந்து அடித்த 5-வது சதம் ஆகும்.

நியூசிலாந்துக்கு எதிராக 137 மற்றும் 167 ரன்னும், இலங்கைக்கு எதிராக 114 மற்றும் 167 ரன்னும் எடுத்தார்.

இதன் மூலம் அவர் காலிஸ், முகமது யூசுப் சாதனையை சமன் செய்தார். இன்னும் ஒரு சதத்தை தொடர்ந்து அடித்தால் அவர் பிராட்மேன் (தொடர்ந்து 6 சதம்) சாதனையை சமன் செய்வார்.

இந்த நிலையில் தான் சாதனைக்காக விளையாடவில்லை என்று காம்பீர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

தொடக்க காலங்களில் 50 ரன்களுக்கு மேல்தான் எடுப்பேன். ஷேவாக்கின் ஆலோசனை எனக்கு சதங்கள் அடிக்க உதவியாக இருந்தது. இன்னும் ஒரு சதம் அடித்தால் பிராட்மேன் சாதனையை சமன் செய்யலாம் என்று சொல்லப்படுகிறது. நான் அதை மனதில் கொள்ளவில்லை. சாதனைக்காக ஆடவில்லை. சிறப்பாக விளையாடி அணிக்கு ரன் சேர்ப்பது தான் முக்கியம்.

இவ்வாறு காம்பீர் கூறியுள்ளார்

0 comments:

Post a Comment