ஐபிஎல் ஏலம்: பாகிஸ்தான் அமைச்சர் பாய்ச்சல்

ஐபிஎல் ஏலத்தில் பாகிஸ்தான் வீரர்கள் ஒருவர் கூட எடுக்கப்படாதது அவமரியாதையான செயல் என பாகிஸ்தான் விளையாட்டுத் துறை அமைச்சர் அஜாஸ் ஹுசைன் ஜக்ரானி கூறினார்.

இது குறித்து ஜக்ரானி கூறியதாவது: பாகிஸ்தான் வீரர்கள் நியாயமில்லாமலும், பாரபட்சமான முறையிலும் நடத்தப்பட்டது தொடர்பாக இந்திய விளையாட்டுத் துறை அமைச்சரிடம் பேசியுள்ளேன். டுவென்டி20 உலக சாம்பியனான பாகிஸ்தான் அணிக்கு இழைக்கப்பட்ட அவமானம் இது என்றார்.

இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் இஜாஸ் பட் கூறியதாவது: இதனால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. கடந்த ஆண்டு கூடத்தான் எங்கள் வீரர்கள் ஐபிஎல் போட்டியில் விளையாடவில்லை என்றார்.

பாகிஸ்தான் வீரர்களின் பங்கேற்பு குறித்து யாரும் உறுதி கூற முடியாத நிலையில் எப்படி கோடிக்கணக்கான ரூபாயை செலவழிக்க முடியும் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இணை உரிமையாளரான ஷில்பா ஷெட்டி கேள்வி எழுப்பினார்.

0 comments:

Post a Comment