19-ந்தேதி நடக்கிறது: ஐ.பி.எல். ஏலத்தில் 97 வீரர்கள்

ஐ.பி.எல். 3-வது கிரிக்கெட் போட்டி மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கான வீரர்களின் ஏலம் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இந்த ஏலத்தில் 97 வீரர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து அப்ரிடி, முகமது அமீர், உமர்அக்மல் உள்பட 20 வீரர்கள் ஏலப்பட்டியலில்
இடம்பெற்று உள்ளனர்.

இதேபோல ஐ.சி. எல்லில் விளையாடிய டேமியன் மார்ட்டின் (ஆஸ்திரேலியா) ஷானே பாண்ட் (நியூசிலாந்து), ஷக்லைன் முஸ்தாக் (பாகிஸ்தான்), கிறிஸ்கெயின்ஸ் (நியூசிலாந்து), ஜஸ்டின் கெம்ப் (தென்ஆப்பிரிக்கா) போன்ற வீரர்களும் இதில் இடம் பெற்று உள்ளனர்.

ஆலந்து, அயர்லாந்து, ஜிம்பாப்வே, கனடா நாடுகளை சேர்ந்த வீரர்களும் ஏலப்பட்டியலில் உள்ளனர்.

0 comments:

Post a Comment