இந்திய தொடர்: ஸ்மித் நம்பிக்கை

இந்தியாவுக்கு எதிரான தொடரில் அனுபவ வீரர்கள் கைகொடுப்பார்கள்,'' என, தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் கிரீம் ஸ்மித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.ஸ்மித் தலைமையிலான தென் ஆப்ரிக்க அணி இன்று இந்தியா வருகிறது. இங்கு இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் பிப்., 6ல் நாக்பூரில் துவங்கவுள்ளது. அதற்கு முன்னதாக பிப்., 2 ம் தேதி துவங்கும் தென் ஆப்ரிக்க அணி, இந்தியன் போர்டு பிரசிடென்ட் லெவன் அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. சமீபத்தில் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்டுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பயிற்சியாளர்...

தென் ஆப்ரிக்காவை வீழ்த்த கபில் "ஐடியா'

இந்திய அணியின் பலம் சுழற்பந்துவீச்சு தான். இதற்கேற்ப தென் ஆப்ரிக்க டெஸ்ட் தொடரின் போது ஆடுகளங்கள் அமைக்கப்பட வேண்டும், '' என, கபில் தேவ் ஆலோசனை தெரிவித்துள்ளார்.இன்று இந்தியா வரும் தென் ஆப்ரிக்க அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது. இதுகுறித்து இந்திய "ஜாம்பவான்' கபில் தேவ் கூறியது:இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு பிரிவை பொறுத்தவரை ஜாகிர் கான் மட்டுமே சிறப்பாக செயல்படுகிறார். அவரைத் தவிர, போட்டிகளில் சாதிக்கக்கூடிய அளவில் வேறு யாரும் இல்லை. இஷாந்த் சர்மாவின் பலமே அவரது "இன்ஸ்விங்' பவுலிங் தான். இதை பேட்ஸ்மேன்கள்...

2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி தென் ஆப்பிரிக்க அணி நாளை வருகை

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாட முடிவு செய்துள்ளது. இதற்காக தென் ஆப்பிரிக்க அணி நாளை (31-ந்தேதி) இந்தியா வருகிறது. தென் ஆப்பிரிக்க வீரர்கள் மும்பை வந்து இறங்குகிறார்கள்.அங்கிருந்து நாக்பூர் செல்கிறது. அங்கு இந்திய போர்டு தலைவர் லெவனுடன் 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் (பிப்ரவரி 2 மற்றும் 3-ந்தேதி) விளையாடுகிறது. இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 6-ந்தேதி நாக்பூரில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது....

தேர்வு எழுத தோனிக்கு சலுகை

இந்திய அணி கேப்டன் தோனி, தனது பி.காம்.,பரீட்சையை, அவர் விரும்பும் தேர்வு மையத்தில் எழுதலாம்,'' என, கல்லு<õரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்திய அணியின் கேப்டன் தோனி, கடந்த 2008 ல் ராஞ்சியில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் பி.காம்., சேர்ந்தார். பின் கிரிக்கெட் போட்டிகளால் அவரால் படிப்பை தொடர முடியவில்லை. தற்போது பி.காம்., தேர்வுகளை எழுத, தோனி விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கல்லு<õரி டீன் டாக்டர் ஜெயந்த் சின்கா கூறியது: கடந்த ஒரு மாதத்துக்கு முன், தோனியிடம் பேசினேன். அவர் பி.காம்., தேர்வுகளை எழுத ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார்....

4-வது ஐ.பி.எல். போட்டியில் 500 வீரர்களை ஏலம்விட திட்டம்

3-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற மார்ச் மாதம் தொடங்கி நடக்க உள்ளது. ஒவ்வொரு அணிக்கும் வீரர்களை 3 ஆண்டுகளுக்கு மட்டுமே ஏலம் விட்டு இருந்தனர். இந்த போட்டியுடன் வீரர்கள் ஏல ஒப்பந்த காலம் முடிகிறது. எனவே அடுத்த ஆண்டு நடக்கும் 4-வது ஐ.பி.எல். போட்டிக்கு வீரர்கள் புதிதாக ஏலம் விடப்பட உள்ளனர். இந்த ஏலம் வருகிற ஜூலை மாதம் நடக்கிறது. இதில் மொத்தம் 500 வீரர்கள் வரை ஏலம் விடப்பட உள்ளனர். இது உலகிலேயே மிகப்பெரிய விளையாட்டு வீரர் ஏலமாக இருக்கும். தற்போது அணிகள் தங்களிடம் வைத்திருக்கும் வீரர்களில் இந்தியர் 4 பேர், வெளிநாட்டினர் 2 பேரை மீண்டும் வைத்து...

இந்தியாவுக்கு வங்கதேசம் பதிலடி

மிர்புர் டெஸ்டில் தமிம் இக்பால் சதமடித்து அசத்த, இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தது வங்கதேசம்.வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. சிட்டகாங்கில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் மிர்புரில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் வங்கதேசம் 233 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி, 2 ம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 459 ரன்கள் எடுத்திருந்தது. தோனி அரை சதம்: நேற்று 3 ம் நாள் ஆட்டம் நடந்தது. பொறுப்புடன் ஆடிய இந்திய கேப்டன் தோனி, அரை சதம் கடந்தார். இவர் 89 ரன்கள் குவித்து அவுட்டானார்....

சச்சினுக்கு நோட்டீஸ்

சச்சின் வாங்கிய காருக்கு வரி செலுத்தாததால், நவி மும்பை மாநகராட்சியில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மும்பையில் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் புதிய வாகனங்களை பதிவு செய்பவர்கள் முறையாக வரி செலுத்துவதில்லை. இதுகுறித்து நவி மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தியில்,"" இதுவரை வாகனங்களுக்கான பதிவு வரியாக, சுமார் 50 கோடி ரூபாய்க்கு மேல் கட்டப்படாமல் உள்ளது. இதுகுறித்து கடந்த 15 நாட்களுக்கு முன், மத்திய நிதித்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டு இருந்தது,'' என தெரிவிக்கப்பட்டு இருந்தது. பட்டியலில் சச்சின்: இதையடுத்து கட்டப்படாமல் உள்ள வரியை வசூலிக்கும்...

கிரிக்கெட்டின் "காந்தி'

கிரிக்கெட்டின் காந்தி என்று அழைக்கப்படுபவர் மேற்கிந்தியத் தீவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் சர் ஃபிராங்க் மார்டைமர் மேக்லின் வோரல்.1924-ல் பார்படோஸ் தீவிலுள்ள பிரிட்ஜ்டவுனில் பிறந்தார் ஃபிராங்க் வோரல். மேற்கிந்தியத் தீவு மக்களுக்குப் பிடித்தமான விளையாட்டு வோரலுக்கும் பிடித்ததில் ஆச்சர்யமில்லைதான். ஆனால் இவர் கிரிக்கெட் விளையாடியது 5 வயது முதலே என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் தேசிய அணியில் அவர் தனது 23-வது வயதில்தான் இடம்பிடித்தார்.இங்கிலாந்துக்கு எதிராக 1947-48-ல் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற போட்டியில் அறிமுகமானார். அபாரமாக விளையாடியபோதும்...

தொடரை கைப்பற்ற இந்தியா "ரெடி

இந்தியா, வங்கதேச அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று மிர்புரில் துவங்குகிறது. காயத்தில் இருந்து மீண்ட கேப்டன் தோனி களமிறங்குவதால், இந்திய அணி உற்சாகத்துடன் காணப்படுகிறது. சச்சின், காம்பிர் உள்ளிட்ட வீரர்கள் "சூப்பர் பார்மில்' இருப்பதால், இப்போட்டியில் வென்று, தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்ற காத்திருக்கிறது. வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. சிட்டகாங்கில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் இன்று மிர்புரில் உள்ள ஷெர்-இ-பங்களா மைதானத்தில் துவங்குகிறது. தேறுவாரா யுவராஜ்:இந்திய...

ஐபிஎல் ஏலம்: பாகிஸ்தான் அமைச்சர் பாய்ச்சல்

ஐபிஎல் ஏலத்தில் பாகிஸ்தான் வீரர்கள் ஒருவர் கூட எடுக்கப்படாதது அவமரியாதையான செயல் என பாகிஸ்தான் விளையாட்டுத் துறை அமைச்சர் அஜாஸ் ஹுசைன் ஜக்ரானி கூறினார்.இது குறித்து ஜக்ரானி கூறியதாவது: பாகிஸ்தான் வீரர்கள் நியாயமில்லாமலும், பாரபட்சமான முறையிலும் நடத்தப்பட்டது தொடர்பாக இந்திய விளையாட்டுத் துறை அமைச்சரிடம் பேசியுள்ளேன். டுவென்டி20 உலக சாம்பியனான பாகிஸ்தான் அணிக்கு இழைக்கப்பட்ட அவமானம் இது என்றார்.இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் இஜாஸ் பட் கூறியதாவது: இதனால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. கடந்த ஆண்டு கூடத்தான் எங்கள் வீரர்கள் ஐபிஎல்...

தொடர்ந்து 5-வது சதம் சாதனைக்காக ஆடவில்லை

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் கவுதம் காம்பீர். வங்காள தேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் அவர் 116 ரன்கள் எடுத்தார். டெஸ்ட் போட்டியில் காம்பீர் தொடர்ந்து அடித்த 5-வது சதம் ஆகும். நியூசிலாந்துக்கு எதிராக 137 மற்றும் 167 ரன்னும், இலங்கைக்கு எதிராக 114 மற்றும் 167 ரன்னும் எடுத்தார். இதன் மூலம் அவர் காலிஸ், முகமது யூசுப் சாதனையை சமன் செய்தார். இன்னும் ஒரு சதத்தை தொடர்ந்து அடித்தால் அவர் பிராட்மேன் (தொடர்ந்து 6 சதம்) சாதனையை சமன் செய்வார். இந்த நிலையில் தான் சாதனைக்காக விளையாடவில்லை என்று காம்பீர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-...

ஐ.பி.எல்., ஏலத்தில் "ஜாக்பாட்'

ஐ.பி.எல்., ஏலத்தில் நியூசிலாந்து வீரர் ஷேன் பாண்ட், வெஸ்ட் இண்டீசின் போலார்டுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. இருவரும் அதிகபட்சமாக தலா 3.43 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டனர். அப்ரிதி உள்ளிட்ட பாகிஸ்தான் வீரர்களை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை இந்தியன் பிரிமியர் லீக்(ஐ.பி.எல்.,) சார்பில் மூன்றாவது கட்ட "டுவென்டி-20' தொடர் வரும் மார்ச் 12 முதல் ஏப்., 25 ம் தேதி வரை இந்தியாவில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் நேற்று மும்பையில் நடந்தது. ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி தலைமையில் நடந்த ஏலத்தில் நீடா அம்பானி (மும்பை இந்தியன்ஸ்), விஜய் மல்லையா...

வங்காளதேச டெஸ்ட் : தெண்டுல்கர் 44-வது சதம்

இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே நடக்கும் 2 டெஸ்ட் போட்டிகளில் முதல் டெஸ்ட் போட்டி சிட்டகாங் நகரில் நேற்று தொடங்கியது. முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 63 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்திருந்தபோது போதிய வெளிச் சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது தெண்டுல்கர் 76 ரன்களுடனும் இஷாந்த்சர்மா 1 ரன்னுடனும் இருந்தனர். இன்று காலை 9.00 மணிக்கு போட்டி தொடங்க வேண்டும். ஆனால் பனி மூட்டத்தால் மைதானம் சரியாக தெரியவில்லை. எனவே போட்டி 1 1/2 மணி நேரம் தாமதமாக 10.30 மணிக்கு...