மீண்டும் வருவாரா ஸ்ரீசாந்த்?


உள்ளூர் போட்டிகளில் திறமையை நிரூபித்து, மீண்டும் தேசிய அணியில் இடம் பிடிப்பேன்,'' என, இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், 29. 2005ல் சர்வதேச போட்டிகளில் காலடி வைத்த இவர், இதுவரை 27 டெஸ்ட் (87 விக்.,), 53 ஒருநாள் (75 விக்.,), 10 சர்வதேச "டுவென்டி-20' (7 விக்.,) போட்டிகளில் விளையாடி உள்ளார்.

கடைசியாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றபோது, பெருவிரலில் காயம் ஏற்பட்டது. 

வலது, இடது கால் பெருவிரலில் தலா 6 "ஆபரேஷன்' செய்து கொண்ட இவர், ஒரு ஆண்டுக்கு மேலாக ஓய்வில் இருந்தார். 

பின், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மறுவாழ்வு பயிற்சி மேற்கொண்ட இவர், இன்று அகர்தலாவில் துவங்கவுள்ள திரிபுரா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் விளையாடுகிறார்.

ஸ்ரீசாந்த் கூறியது: கால் விரல்களில் அடுத்தடுத்து "ஆபரேஷன்' செய்து கொண்டதால், நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. "வீல்சேரை' பயன்படுத்தி ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல வேண்டியதாயிற்று. 

இதனால் எனது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது என நினைத்தேன். இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) மற்றும் கேரளா கிரிக்கெட் சங்கம் (கே.சி.ஏ.,) உதவியுடன் முன்னேற்றம் கண்டுள்ளேன்.

ஒரு ஆண்டுக்கு மேலாக இந்திய அணியின் "டி-சர்ட்' அணிந்து, போட்டியில் பங்கேற்க முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது. 

உள்ளூர் போட்டிகளில் திறமையை நிரூபித்து மீண்டும் தேசிய அணியில் இடம் பிடிப்பதே இலக்கு. 

இவ்வாறு ஸ்ரீசாந்த் கூறினார்.

0 comments:

Post a Comment