விராத் கோஹ்லி அபார சதம் - தோனி 99-ல் ரன் அவுட்


இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டில் விராத் கோஹ்லி சதம் அடித்தார். தோனி 99 ரன்னில் அவுட்டானார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் நாக்பூரில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 330 ரன்கள் எடுத்தது. இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 87 ரன் எடுத்திருந்தது. கோஹ்லி (11), கேப்டன் தோனி (8) அவுட்டாகாமல் இருந்தனர்.

இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. தோனி, கோஹ்லி இருவரும் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்களது மந்தமான ஆட்டத்தினால் ஸ்கோர், ஒன்றிரண்டு ரன்களாக உயர்ந்தது. 

தோனி 28 வது அரைசதம் அடித்தார். மறுமுனையில் சதம் அடித்த விராத் கோஹ்லி, 103 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஜடேஜா 12 ரன்கள் எடுத்தார். தோனி 99 ரன்கள் எடுத்து தேவையில்லாமல் ரன் அவுட்டானார். சாவ்லா (1) விரைவில் திரும்பினார்.

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் எடுத்திருந்தது. அஷ்வின் (7) அவுட்டாகாமல் உள்ளார். 

0 comments:

Post a Comment