சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்துவது கடினம்


பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வருகிறது. 25-ந்தேதி முதல் ஜனவரி 6-ந்தேதி வரை பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாடும். முதலாவது 20 ஓவர் போட்டி பெங்களூரில் வருகிற 25-ந்தேதி நடக்கிறது. 

இந்த நிலையில் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திவது கடினமானது என்று பாகிஸ்தான் ஒருநாள் போட்டி கேப்டன் மிஸ்பா-உல்-ஹக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- 

இங்கிலாந்துக்கு எதிராக மும்பையில் நடந்த டெஸ்டில் இந்தியா தோற்று இருந்தாலும் உள்ளூர் மண்ணில் அந்த அணி வலிமையானது தான். சொந்த மண்ணில் இந்திய வீழ்த்துவது கடினமானதே. 

20 ஓவர் போட்டியிலும், ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி சிறப்பாக உள்ளது. இதனால் அந்த அணியை உள்ளூரில் தோற்கடிப்பது கடும் சவாலானது. 

இந்திய அணியை வீழ்த்த எங்களது உடல் வலிமையும், மனவலிமையும் மிகவும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்திய சுற்றுப்பயணத்தில் சிறப்பாக ஆட வேண்டும் என்பது ஒவ்வொரு வீரருக்கும் தெரியும். எப்போதுமே இந்திய தொடர் வீரர்களுக்கு நெருக்கடியாக தான் இருக்கும். 

இவ்வாறு மிஸ்பா-உல்- ஹக் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment