சதம் அடிப்பாரா சச்சின்?


கோல்கட்டா டெஸ்டில் சச்சின் சதம் அடித்து சாதிப்பார்,'' என, முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி கணித்துள்ளார்.

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், 39. சதத்தில் சதம் உள்ளிட்ட பல்வேறு சாதனைகள் படைத்த இவர், சமீபகாலமாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 

இவரது "பார்ம்' குறித்து சர்ச்சைகள் எழுந்தன. இந்நிலையில் இவர், கோல்கட்டாவில் நாளை துவங்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் விளையாட உள்ளார். இதில் இழந்த "பார்மை' மீட்டு எழுச்சி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி கூறியது: கோல்கட்டா டெஸ்ட் குறித்து நிறைய செய்திகள் வெளியாகின்றன. சமீபகாலமாக "பார்மின்றி' தவிக்கும் சச்சின், கோல்கட்டா டெஸ்டில் சதம் அடித்து சாதிப்பார் என நம்புகிறேன். 

மும்பை டெஸ்டில் இந்திய அணி தோல்வி அடைந்ததன் மூலம், தொடர் 1-1 என சமநிலை அடைந்தது. மீதமுள்ள இரண்டு டெஸ்டிலும், இந்திய அணி எழுச்சி பெற்று, தொடரை கைப்பற்றும் என எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு கங்குலி கூறினார்.

சச்சின் கூறுகையில்,"" ராயை நான் சந்தித்தது கிடையாது. கிரிக்கெட்டிற்கு இவர் அளித்துள்ள பங்களிப்பு பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். இவரைப்பற்றிய புத்தகத்தை வெளியிடும் வாய்ப்பு கிடைத்தது பெருமை,'' என்றார்.

கங்குலி கூறுகையில்,"" பங்கஜ் ராய் துவக்க ஆட்டக்காரராக விளையாடும் போதெல்லாம், "ஹெல்மெட்' கிடையாது. அப்போது, வேகப்பந்துவீச்சாளர்களை எதிர் கொண்டு, 10 ரன்கள் எடுப்பது இப்போது 20 ரன்கள் எடுப்பதற்கு சமம்,'' என்றார். 

0 comments:

Post a Comment