இந்திய-பாக்., தொடர் நடக்குமா?


பாகிஸ்தான் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர் திட்டமிட்டபடி நடக்கும். இதை ரத்து செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை,' என, பி.சி.சி.ஐ., தெரிவித்தது.

இரண்டு "டுவென்டி-20', மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க, பாகிஸ்தான் அணி 22ம் தேதி இந்தியா வருகிறது. பெங்களூருவில், முதல் "டுவென்டி-20' போட்டி (டிச., 25) நடக்கிறது. 

இதனிடையே, இந்தியா வந்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக், இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ., மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா கூறுகையில்,"" நமது உள்துறை அமைச்சர் பலவீனமாக உள்ளார். 

கடின வார்த்தைகளை மாலிக் பேசும் போது, நாமும் கடினமாக பதிலடி கொடுத்திருக்க வேண்டும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் தொடரை ரத்து செய்ய வேண்டும்,'' என்றார்.

பி.சி.சி.ஐ., துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா கூறுகையில்,""விளையாட்டில் அரசியலை கலக்கக்கூடாது. 

பாகிஸ்தான் தொடர் ஏற்கனவே திட்டமிடப்பட்டது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன. இந்நிலையில் தொடரை ரத்து செய்வது என்ற கேள்விக்கு இடமில்லை. போட்டிகள் வழக்கம் போல நடக்கும்,'' என்றார்.

0 comments:

Post a Comment