முதல் முறையாக இந்தியாவிற்கு நம்பர்-1 வாய்ப்பு


ஒருநாள் அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் இந்திய அணிக்கு "நம்பர்-1' இடம் பிடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.,) அணிகளுக்கான ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து (121 புள்ளி) முதலிடத்திலும், தென் ஆப்பரிக்கா (121) இரண்டாவது இடத்திலும், இந்தியா (120) மூன்றாவது இடத்திலும் உள்ளன. 

ற்போது இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணி 3 ஒருநாள் போட்டியில் பங்கேற்கிறது. 

இதன் முதல் போட்டி சென்னையில் நாளை துவங்குகிறது. இதில் இந்தியா வெற்றி பெற்றால் ஒருபுள்ளி பெற்று 121 புள்ளி பெற்று முதல் முறையாக முதலிடத்திற்கு முன்னேறும். 

இதுவரை இந்திய அணி அதிகபட்சமாக இரண்டாவது இடம் பிடித்துள்ளது. 3 போட்டிகளிலும் இந்தியா வெல்லும் பட்சத்தில் 123 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொள்ளலாம்.

மாறாக ஏதாவது ஒரு போட்டியில் தோல்வியடையும் பட்சத்தில் இந்திய அணி மூன்றாவது இடத்திலேயே நீடிக்க நேரிடும். 

பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றும் பட்சத்தில் ஆறாவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறும். 

0 comments:

Post a Comment