நாக்பூர் டெஸ்ட் - மீண்டும் போல்டானார் சச்சின்


இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டில், இந்திய வீரர் சச்சின் மீண்டும் "போல்டானார். 

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளின் முடிவில், இந்திய அணி 1-2 என பின்தங்கி உள்ளது. 

கடைசி டெஸ்ட், நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடக்கிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்திருந்தது. பிரையர் (34), ரூட் (31) அவுட்டாகாமல் இருந்தனர். 

இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு பிரையர், 24வது அரைசதத்தை பதிவு செய்தார். இவர் 57 ரன்கள் எடுத்த போது அஷ்வின் "சுழலில் சிக்கினார். 

மறுமுனையில் அறிமுக வீரர் ஜோ ரூட்(73) முதல் அரைசதம் அடித்தார். பின் வந்த பிரஸ்னன் "டக் அவுட்டானார். அதிரடி ஆட்டத்தை கையாண்ட சுவான் (56) டெஸ்ட் அரங்கில் 5வது அரைசதத்தை எட்டினார். 

ஆண்டர்சன் (4) அவுட்டாக, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 330 ரன்களுக்கு "ஆல் அவுட் ஆனது. பனேசர் (1) அவுட்டாகாமல் இருந்தார்.

இந்தியா சார்பில் சாவ்லா 4 விக்கெட், இஷாந்த் சர்மா 3 விக்கெட் கைப்பற்றினர். 

பின் முதல் இன்னிங்சை துவங்கிய இந்திய அணிக்கு சேவக் டக் அவுட்டானார். புஜாரா (26) நிலைக்கவில்லை. 

ஆண்டர்சன் வேகத்தில் சச்சின் (2) போல்டானார். காம்பிர் (37) நிலைக்கவில்லை. இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 87 ரன்கள் எடுத்திருந்தது. 

கோஹ்லி(11), தோனி (8) அவுட்டாகாமல் இருந்தனர்.

0 comments:

Post a Comment