சச்சின் வியக்கத்தக்க வீரர் : பாண்டிங்

கிரிக்கெட்டில் தொடர்ந்து 20 ஆண்டுகளாக விளையாடி, பல சாதனைகள் படைத்து வரும் இந்திய பேட்ஸ்மேன் சச்சின், வியக்கத்தக்க வீரர்,'' என, பாண்டிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்காவில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய அணி, அரையிறுதியில் இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக பைனலுக்கு முன்னேறி உள்ளது.

இதுகுறித்து பாண்டிங் கூறியது:

அணியில் இளம் வீரர்கள் அதிகம் இடம் பிடித்திருப்பது, வெற்றிக்கு முக்கிய காரணம். இதற்காக நீண்ட நாட்கள் காத்திருந்தோம். அரையிறுதியில் இங்கிலாந்தின் பிரஸ்னன், ரைட் சிறப்பாக விளையாடினர்.

ஆனால் எங்கள் அணியின் பவுலிங் சிறப்பாக இருந்தது. தேவையான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி, போட்டியை எங்கள் பக்கம் கொண்டு வந்தோம். சரியான நேரத்தில் பைனலுக்குள் நுழைந்துள்ளோம்.


சச்சினுக்கு பாராட்டு:

ஒருநாள் அரங்கில் நான் 12, 000 ரன்கள் கடந்தது மிகப்பெரிய சாதனை. நான் இந்த இலக்கை எட்டுவதற்கு சச்சின் தான் காரணம். அவரது பல இன்னிங்ஸ்களை கவனித்து பார்த்துள்ளேன். அவர் ஒரு வியக்கத்தக்க வீரர். 20 ஆண்டுகளாக கிரிக்கெட்டில் அவர் செய்துவரும் சாதனைகளைப் பார்க்கும் போது நம்பமுடியாமல் உள்ளது.

அவர்தான் எல்லோருக்கும் இலக்கு நிர்ணயித்து உள்ளார். சச்சினைப் போல நானும் 20 ஆண்டுகள் கிரிக்கெட்டில் இருந்திருந்தால், வீல் சேரில் அமர்ந்து தான் பேட்டிங் செய்ய வேண்டியது இருக்கும். இவ்வாறு பாண்டிங் கூறினார்.
---


பாண்டிங்கின் சாதனைகள்

இங்கிலாந்துக்கு எதிராக நேற்று முன் தினம் நடந்த அரையிறுதிப் போட்டியில், பல்வேறு சாதனைகளை படைத்தார் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்.

* 12 ஆயிரம் ரன்களை கடந்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை பாண்டிங் (12043 ரன்கள்) படைத்தார். தவிர, உலக அளவில் மூன்றாவது வீரர் இவர். இதற்கு முன் இந்தியாவின் சச்சின் (16903 ரன்கள்) மற்றும் இலங்கையின் ஜெயசூர்யா (13377 ரன்கள்) இந்த சாதனை படைத்துள்ளனர்.

* ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் 28 சதம் எடுத்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை இலங்கையின் ஜெயசூர்யாவுடன் பகிர்ந்து கொண்டார். இப்பட்டியலில் 44 சதங்கள் எடுத்து இந்தியாவின் சச்சின் முதலிடத்தில் உள்ளார்.

* ஒரு அணியின் கேப்டனாக, 20 சதம் அடித்த முதல் கிரிக்கெட் வீரர் பாண்டிங் தான்.

0 comments:

Post a Comment