சாலஞ்சர் டிராபி: யுவராஜ் நீக்கம்

சாலஞ்சர் டிராபி தொடருக்கான "இந்தியா-ரெட்' அணியில் கேப்டன் யுவராஜ் சிங் காயம் காரணமாக நீக்கப்பட்டார். இவருக்கு பதிலாக அமேயா ஸ்ரீகாந்தே சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியா புளூ, ரெட், கிரீன் அணிகள் பங்கேற்கும் சாலஞ்சர் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை நாக்பூரில் நடக்கிறது. இதில் இந்திய ரெட் அணியின் கேப்டனாக யுவராஜ் சிங் இருந்தார்.

இவருக்கு சாம்பியன்ஸ் டிராபி தொடரின்போது வலது கையில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து யுவராஜ் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இந்நிலையில் இவர் வரும் 8ம் தேதி துவங்கும் சாலஞ்சர் டிரபி தொடரிலும் நீக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு பதிலாக அமேயா ஸ்ரீகாந்தே சேர்க்கப்ட்டுள்ளார். இந்த அணியின் கேப்டன் விரைவில் அறிவிக்கப்பட உள்ளார் என இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment