மன்னிப்பு கேட்டார் சைமன் டாபெல்

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில், பாகிஸ்தான் வீரர் உமர் அக்மலுக்கு தவறுதலாக தீர்ப்பு வழங்கியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார் அம்பயர் சைமன் டாபெல்.

தென் ஆப்ரிக்காவில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடந்தது. இத்தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் அம்பயராக ஆஸ்திரேலியாவின் சைமன் டாபெல் செயல்பட்டார்.

இவர், பாகிஸ்தான் வீரர் உமர் அக்மலுக்கு, எல்.பி.டபிள்யு., முறையில் "அவுட்' கொடுத்தார். ஆனால் "டிவி' ரீப்ளேயில் பார்த்த போது பந்து பேட்டில் பட்டு சென்றது தெரியவந்தது. தவறுதலாக தீர்ப்பு வழங்கிய அம்பயர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பயிற்சியாளர் இன்டிகாப் ஆலம் தெரிவித்திருந்தார்.

இப்பிரச்னை குறித்து போட்டி நடுவர் ஸ்ரீநாத் விசாரணை நடத்தினார். இக்கூட்டத்தில் பாகிஸ்தான் பயிற்சியாளர் இன்டிகாப் ஆலம், அம்பயர்கள் சைமன் டாபெல், இயான் குட் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில், டாபெல் அளித்த தீர்ப்பு தவறு என்பது உறுதி செய்யப்பட்டது. அதற்குப் பின் பாகிஸ்தான் வீரர் உமர் அக்மலிடம், தான் அளித்த தவறான தீர்ப்புக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார் சைமன் டாபெல்

0 comments:

Post a Comment