2-வது போட்டியில் யுவராஜ் விளையாடுவார்'

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் ஆட்டத்தில் யுவராஜ் சிங் விளையாடுவார் என்று இந்திய அணியின் கேப்டன் எம்எஸ் தோனி கூறினார்.

வதோதராவில் நிருபர்களுக்கு சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி: கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து விலகிய யுவராஜ் சிங் ஆஸ்திரேலியாவுடனான முதல் ஒரு நாள் ஆட்டத்தில் விளையாடுவது சந்தேகம்.

ஆனால் 2-வது ஒரு நாள் ஆட்டத்தில் அவர் நிச்சயம் விளையாடுவார் என்பதை உறுதியாக சொல்கிறேன் என்றார் அவர்.

முதல் ஒரு நாள் ஆட்டத்தில் பங்கேற்கும் 11 இந்திய அணி வீரர்களின் பெயர்களைத் தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

மேலும் அவர் கூறியதாவது:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தத் தொடர் 7 போட்டிகள் கொண்டதாக இருக்கிறது. முதலில் தோற்றாலும் அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை எந்த அணி வேண்டுமானாலும் கைப்பற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது.

அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் முழு உடல் தகுதியுடன் உள்ளனர். வீரர்களுக்கு சிறு காயங்கள், பிரச்னைகள் இருந்தாலும் அவர்கள் சிறப்பாக விளையாடுவர் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர்

0 comments:

Post a Comment