சற்றும் எதிர்பார்க்கவில்லை

ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருது கிடைக்கும் என நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை,'' என, ஆஸ்திரேலிய வீரர் ஜான்சன் வியப்பு தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்காவின் ஜோகனஸ்பர்க்கில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இதில் கடந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் ஜான்சன், வென்றார்.

இதுகுறித்து ஜான்சன் கூறியது:

ஆஸ்திரேலிய அணிக்காக ஆஷஸ் தொடரில் சிறப்பாக செயல்படவில்லை. இருப்பினும் தொடர் இறுதியில் சில விக்கெட்டுகளை கைப்பற்றினேன். இந்நிலையில், வேறு ஒரு வீரர் தான் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை வெல்வார் என நினைத்து அமர்ந்து இருந்தேன்.

ஆனால் எனக்கு விருது கிடைத்தது பெருமையாகவும், ஆச்சர்யமாகவும் உள்ளது. இந்த விருது என்னை உற்சாகப்படுத்தி உள்ளது.

இந்தியாவின் காம்பிர், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டிராஸ் ஆகியோர் எனக்கு முன்னிலையில் இருந்தனர். இவர்களில் ஒருவருக்குத்தான் விருது கிடைக்கும் என நினைத்திருந்தேன்.

ஆனால் பெருமைக்குரிய இந்த விருதை நான் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது. இதன் மூலம் தேசத்திற்காக போதுமான அளவில் செயல்பட்டுள்ளேன் என நினைக்கிறேன்.

இவ்வாறு ஜான்சன் தெரிவித்தார்

0 comments:

Post a Comment