இளம் கிரிக்கெட் வீரர் சுட்டுக் கொலை

இளம் கிரிக்கெட் வீரர் ககன்தீப் சிங் (படம்) வெள்ளிக்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.

மீரட்டில் உள்ள உணவு விடுதி ஒன்றுக்கு இரவு 11 மணி அளவில் ககன்தீப்பும், அவரது நண்பரும் சென்றுள்ளனர். அப்போது அந்த உணவு விடுதிக்கு வந்த ராகுல் என்பவர் தனது நண்பர்களுடன் சாப்பிட வந்துள்ளார்.

உணவு அளிப்பதில் தாமதம் ஏற்படவே உணவு விடுதியின் உரிமையாளர் ஷாநவாஸýடன் ராகுல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், காரில் இருந்து இறங்கி வந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், ஷாநவாஸýம், இச்சம்பவத்துக்கு தொடர்பில்லாத ககன்தீப்பும் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக ராகுல் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் இருவரைத் தேடி வருவதாகவும் ஐஜி ஜாவேத் அக்தர் தெரிவித்தார். ஜி.கே.நாயுடு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காகவே ககன்தீப் மீரட் வந்தார் என அவரது உறவினர் மகேந்திர சிங் தெரிவித்தார்.

"ஆஸ்திரேலியா சென்ற 19 வயதுக்குள்பட்டோருக்கான இந்திய அணியில் ககன்தீப் இடம்பெற்றிருந்தார். வளர்ந்துவரும் இளம் வீரரை இழந்துவிட்டோம்' என மீரட் கிரிக்கெட் சங்கத் தலைவர் யுத்வீர் சிங் தெரிவித்தார்

0 comments:

Post a Comment